சின்னஞ்சிறு கேள்வி பதில்கள்: தலைப்பு குர்‍ஆன், கேள்விகள் 501 லிருந்து 510 வரை - (பாகம் 22)

சின்னஞ்சிறு "இஸ்லாம் கிறிஸ்தவம்" தலைப்பின் முந்தைய 500 கேள்வி பதில்களை படிக்க இங்கு சொடுக்கவும். 

இந்த கட்டுரையில் "குர்‍ஆன் என்ற தலைப்பில்" மேலதிக 10 கேள்விகளுக்கு பதில்களைக் காண்போம்.  


கேள்வி 501:  முஸ்லிம்களுக்கு நான்கு மனைவிகளை குர்‍ஆன் கட்டளையிட்டு, முஹம்மதுவிற்கு மட்டும் அனேக மனைவிகளை திருமணம் செய்ய அனுமதியளித்த‌துள்ளதாமே! இது உண்மையா?

பதில் 501: ஆமாம், இக்கூற்று உண்மை தான்.

குர்‍ஆனின் படி ஒரு முஸ்லிம் நான்கு பெண்களை திருமணம் செய்துக்கொள்ளலாம்.  

பார்க்க குர்‍ஆன் 4:3

4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

ஆனால், முஹம்மதுவிற்கு மட்டும் 4க்கும் அதிகமான பெண்களை திருமணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

பார்க்க குர்‍ஆன் 33:50-52.

33:50. நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்); இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்); மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.

33:51. அவர்களில் நீர் விரும்பிய வரை ஒதுக்கி வைக்கலாம். நீர் விரும்பியவரை உம்முடன் தங்கவைக்கலாம், நீர் ஒதுக்கி வைத்தவர்களில் நீர் நாடியவரை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். (இதில்) உம்மீது குற்றமில்லை; அவர்களுடைய கண்கள் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர்கள் விசனப்படாமல் இருப்பதற்கும் அவர்கள் ஒவ்வொருவரும் நீர் அவர்களுக்கு கொடுப்பதைக் கொண்டு திருப்தி அடைவதற்காகவும், இது சுலபமான வழியாகும். மேலும், அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்; மிக்க பொறுமையாளன்.

33:52. இவர்களுக்குப் பின்னால் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் தவிர இதர பெண்கள் உமக்கு ஹலால் ஆகமாட்டார்கள்; இன்னும் இவர்களுடைய இடத்தில் வேறு மனைவியரை மாற்றிக் கொள்வதும்; அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே - ஹலால் இல்லை - மேலும், அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் கண்காணிப்பவன்.

(முஹம்மது ஜான் தமிழாக்கம்)

கேள்வி 502: குர்‍ஆன் 33:52ன் படி, முஹம்மது அனேக திருமணங்கள் செய்யக்கூடாது என்று கட்டளையுள்ளதே! இதன்படி முஹம்மது கூட நான்கு மனைவிகளை மட்டுமே திருமணம் செய்திருக்கவேண்டுமல்லவா?

பதில் 502: சரியாக லாஜிக்கை கண்டுபிடித்தீர்கள், சகோதரரே! ஆனால், பிரச்சனை இங்கு தான் உள்ளது. குர்‍ஆனில் உள்ள முரண்பாட்டைப் பாருங்கள்.

  • குர்‍ஆன் 33:50ன் படி முஹம்மது அனேக பெண்களை திருமணம் செய்யலாம்.
  • குர்‍ஆன் 33:52ன் படி முஹம்மது அனேக பெண்களை திருமணம் செய்யக்கூடாது.

இது என்ன கூத்து! இரண்டு வசனங்களுக்கு இடையே இவ்வளவு பெரிய முரண்பாடா?

குர்‍ஆனின் இந்த குறைப்பாட்டை, தவறை சரி செய்ய முஸ்லிம் அறிஞர்கள், குர்‍ஆன் 33:52ம் வசனம், 33:50ம் வசனத்தை இரத்து செய்துவிட்டது (செல்லாததாக்கிவிட்டது) என்று பொருள் கூறுகிறார்கள். 

இந்த வசனத்தின் பொருள் சரியாக புரியும் படி ஆய்வு செய்வோம் வாருங்கள்.

ஒரு கட்டளை பிறப்பதற்கு முன்பே அதை இரத்து செய்யும் கட்டளையை அல்லாஹ் இறக்கியுள்ளான். இதனை நீங்கள் அறிவீர்களா? ஒரு கரு கர்ப்பத்தில் உருவாவதற்கு முன்பாகவே, அதை கருக்கலைப்பு செய்ய ஒரு ஆண் முடிவு செய்தால் எப்படி இருக்கும்?

நமக்கு புரியும் படி ஒரு சிறிய‌ உதராணத்தைக் கொண்டு விளக்குகிறேன்.

இந்திய பிரதமரும் 300 ரூபாய் நோட்டும்:

மேற்கண்ட அல்லாஹ்வின் செயல் எப்படி உள்ளதென்றால், திடீரென்று இன்று (ஜனவரி 30, 2021) இரவு இந்திய பிரதமர் தொலைக்காட்சியில் காணப்பட்டு,  அடுத்த மாதம், மார்ச் 1ம் தேதியிலிருந்து  300 ரூபாய் நோட்டுக்கள் செல்லுபடியாகாது (Demonetization - பண மதிப்பிழப்பு) என்று அறிவிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். 

இதனை கேட்கும் மக்கள், "என்ன ஆச்சு இவருக்கு!? இன்னும் 300 ரூபாய் நோட்டுக்களை அரசு அச்சிடவில்லை மக்களிடம் கொண்டுவரவில்லை, அதற்குள் அதை இரத்து செய்து அரசு கட்டளையிடுகின்றதே, இது என்ன பைத்தியக்காரத்தனம்!" என்று கேள்வி கேட்பார்கள் அல்லவா!

அடுத்த நாள் (ஜனவரி 31) இரவு மறுபடியும் தொலைக்காட்சியில் பிரதமர் தோன்றி, இந்திய அரசாங்கம் 300 ரூபாய் நோட்டுக்களை நாளை முதல் அறிமுகம் செய்கிறது, இனி எடிஎம்களில்  (ATM) 300 நோட்டுக்கள் வரும் என்று அறிவிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.

இப்போது மக்களின் மனநிலை எப்படி இருக்கும்?

  1. மார்ச் 1ம் தேதி முதல் 300 நோட்டுக்கள் செல்லுபடியாகாது என்று முதல் சட்டம் வருகிறது. அதுவும் ஜனவரி 30ம் தேதி வருகிறது.
  2. ஜனவரி 31ம் தேதி,  300 நோட்டுக்களை அரசாங்கம் முதன் முதலாக  மக்களிடம் கொண்டு வருகிறது.
  3. அரசு  வெளியிடும் நோட்டுக்கள் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 28 வரை மட்டும் தான் செல்லுபடியாகும், மார்ச் 1ம் தேதியிலிருந்து அது செல்லுபடியாகாது.

முதலில் 300 ரூபாய் நோட்டுக்களை இரத்து செய்யும் கட்டளையை கொடுத்துவிட்டு, அதன் பிறகு அந்த ரூபாய் நோட்டுக்களை வெளியிடுவது ஒரு முட்டாள்தனமான செயல் அல்லவா என்று மக்கள் கருதுவார்கள். இந்த இரண்டு காரியங்களை தலைகீழாக செய்வதை விட்டுவிட்டு, பிரதமர் சும்மா இருந்திருந்தாலே மக்கள் நிம்மதியாக இருந்திருப்பார்களே!

இப்படித்தான் குர்‍ஆனில் அல்லாஹ் முதலாவது இரத்துசெய்யும் வசனத்தை கட்டளையை இறக்கிவிட்டு, அதன் பிறகு எந்த வசனம் இரத்து செய்யுமோ, அதை இரண்டாவதாக இறக்குகின்றான்.

இது விசித்திரமில்லையா! இது ஆச்சரியமில்லையா! அல்லாஹ் என்ற சர்வ ஞானி இப்படி முட்டாள்தனமாக செயல்படுவானா?

300 ரூபாயை முதலில் இரத்து செய்துவிட்டு, அதன் பிறகு அந்த நோட்டுக்களை மக்களிடம் கொண்டு வந்து சில‌ நாட்கள் புழக்கத்தில் விடுவது, முட்டாள்தனமாகத் தோன்றவில்லை!

அல்லாஹ்வின் இந்த செயலுக்கு ஆதாரமென்ன?

ஸுயுதி என்ற இஸ்லாமிய அறிஞர் இதனை தன் புத்தகத்தில் கூறுகின்றார்.

இப்படிப்பட்ட வசனங்கள் 2 உள்ளன என்று அவர் கூறுகின்றார், இதர அறிஞர்கள் இப்படிப்பட்ட வசனங்கள் 3 அல்லது 4 உள்ளது என்று சொல்வதாக இவரே சொல்கிறார்.

Suyuti quote:

Some scholars have said that in all cases except the following two the abrogating verse appears before the abrogated: these verses are the verse of the waiting period that appears in '1- Baqara, and the verse: "Unlawful to you are women. . ."(33:52) which was examined previously. Others have added a third: the 'spoils of war' verse in chapter '1-Hashr said to have been abrogated by the verse: "Know that whatever spoils of war you capture. . ."(8:41) Some have added a fourth: "Show clemency. . ."(7:199)that is, by taking only the surplus of their possessions. This is according to those who believe that it has been abrogated by the verse ordaining zakat.

மூலம்:  Al-Itqan fi Ulum al-Qur'an  by Jalaluddin Suyuti, English Translation by Muneer Fareed  

இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய தொடுப்பு:  Link

இஸ்லாமிய  அறிஞர் ஸுயுதி சொல்வது என்னவென்றால், குர்‍ஆன் 33:50 & 51ம் வசங்களை  முதலாவது அல்லாஹ் இறக்கி, முஹம்மதுவிற்கு (கணக்கில்லா) பெண்களை  திருமணம் செய்ய அனுமதிக்கிறான். ஆனால் அடுத்த‌ வசனத்தில் அதாவது குர்‍ஆன் 33:52ல், சில பெண்களை மட்டுமே திருமணம் செய்யவேண்டும் என்று முஹம்மதுவிற்கு கட்டளையிடுகின்றான். தன் விருப்பப்படி திருமணங்கள் செய்யக்கூடாது, ஒருவேளை வேறு பெண்களின் அழகு முஹம்மதுவை ஈர்த்தாலும் சரி, அவர் இப்படி செய்யக்கூடாது என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.

அல்லாஹ் ஞானமுள்ளவனாக இருந்திருந்தால், என்ன செய்து இருந்திருக்கவேண்டும்? முதலாவது 33:52ம் வசனத்தை இறக்கியிருக்கவேண்டும் (சில பெண்களை மட்டுமே திருமணம் செய்ய முஹம்மதுவிற்கு  கட்டுப்பாடு இடும் வசனம் 33:52). சில நாட்கள்/மாதங்கள் கழித்து 33:50 & 51ம் வசனங்களை இறக்கி, தான் விதித்த கட்டுப்பாட்டை நீக்கி இருக்கவேண்டும். 

ஆனால், இங்கு எப்படி உள்ளதென்றால், முதலாவது விதிவிளக்கு அளிக்கின்றான் அல்லாஹ்? எதிலிருந்து விதிவிளக்கு அளிக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினால், அதன் பிறகு தான் 52ம் வசனம் வருகிறது. இதற்கு  அவர் 52ம் வசனத்தை  இறக்காமல் இருந்திருந்தாலே சரியாக இருந்திருக்கும்.

இப்போது அந்த மூன்று வசனங்களையும் படிப்போம்:

விதிவிலக்கு அளிக்கும் வசனங்கள் (33:50-51):

33:50. நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்); இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்); மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.

33:51. அவர்களில் நீர் விரும்பிய வரை ஒதுக்கி வைக்கலாம். நீர் விரும்பியவரை உம்முடன் தங்கவைக்கலாம், நீர் ஒதுக்கி வைத்தவர்களில் நீர் நாடியவரை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். (இதில்) உம்மீது குற்றமில்லை; அவர்களுடைய கண்கள் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர்கள் விசனப்படாமல் இருப்பதற்கும் அவர்கள் ஒவ்வொருவரும் நீர் அவர்களுக்கு கொடுப்பதைக் கொண்டு திருப்தி அடைவதற்காகவும், இது சுலபமான வழியாகும். மேலும், அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்; மிக்க பொறுமையாளன்.

குர்‍ஆன் 33:52 (இரத்து செய்யப்பட்ட வசனம்):

33:52. இவர்களுக்குப் பின்னால் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் தவிர இதர பெண்கள் உமக்கு ஹலால் ஆகமாட்டார்கள்; இன்னும் இவர்களுடைய இடத்தில் வேறு மனைவியரை மாற்றிக் கொள்வதும்; அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே - ஹலால் இல்லை - மேலும், அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் கண்காணிப்பவன்.

(டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்)

இஸ்லாமிய அறிஞர்கள் இந்த விஷயத்தில் தவறாக இருந்திருக்கலாம் அல்லவா?

சில முஸ்லிம்கள் அல்லாஹ்வின் இந்த வினோதமான இரத்துசெய்தல் பிரச்சனையை சமாளிப்பதற்கு,  குர்‍ஆன் 33:50-52 வரையிலான வசனங்கள் சரியான வரிசையில் தான் உள்ளது என்று சொல்லலாம். அதாவது, குர்‍ஆன் 33:50-51 முதலாவது இறங்கியது, முஹம்மது தன் விரும்பிய படி பெண்களை திருமணம் செய்யலாம், விவாகரத்து செய்யலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு 52வது வசனத்தில் அந்த சலுகை நீக்கப்பட்டது என்று சொல்லக்கூடும்.

இது உண்மையென்றால், இந்த வசனம் 33:52 இறக்கப்பட்ட பிறகு முஹம்மது வேறு எந்த ஒரு பெண்ணையும் திருமணம் செய்து இருந்திருக்கக்கூடாது.

இந்த அத்தியாயம் (33) ஹிஜ்ரி 5ம் ஆண்டு இறக்கப்பட்டதாக முஸ்லிம் அறிஞர்கள் அறிவிக்கிறார்கள் (Link 1 & Link 2). 

முஹம்மது மக்காவிலிருந்து மதினாவிற்கு ஹிஜ்ரி செய்த ஆண்டு கி.பி. 622 ஆகும், இந்த ஆண்டோடு 5 ஆண்டுகள் கூட்டினால், 622 + 5 = 627ம் ஆண்டு ஆகிறது.  ஆக, 33ம் அத்தியாயம் 627ம் ஆண்டு இறக்கப்பட்டு இருந்திருக்கின்றது, மேலும் முஹம்மது மரித்த ஆண்டு, 632 ஆகும். இதன்படி கணக்கிட்டால், 33:52ம் வசனத்திற்கு பிறகு முஹம்மது குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் (627 லிருந்து 632 வரை) வாழ்ந்திருக்கின்றார்.  இஸ்லாமிய அறிஞர் ஸுயூதி குறிப்பிட்டது பொய் என்று கருதி, நம் முஸ்லிம்கள் சொல்வது மெய் என்று கருதினால், இந்த ஐந்து ஆண்டுகளில் முஹம்மது ஒரு பெண்ணையும் திருமணம் செய்து இருந்திருக்கக்கூடாது.

இந்த ஐந்து ஆண்டுகளில் முஹம்மது ஒரு திருமணத்தையும் செய்யவில்லை, திருமண ஒப்பந்தம் கூட செய்யவில்லை என்று முஸ்லிம்கள் நிருபிக்கமுடியுமா?

கீழ்கண்ட பக்கத்தில் முஹம்மதுவின் திருமணங்கள், விவாகரத்துக்கள், திருமணம் ஒப்பந்தங்கள் பற்றி ஆண்டுவாரியான பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. 

முஹம்மதுவின் மனைவிகள் மற்றும் வைப்பாட்டிகள் பட்டியல்: Link & Link

Muhammad's wives  & Married Year

  1. Khadija bint Khuwaylid - 595–619
  2. Sawda bint Zamʿa - 619–632
  3. Aisha bint Abi Bakr - c. 623–632
  4. Hafsa bint Umar - 624–632
  5. Zaynab bint Khuzayma - 625–627
  6. Hind bint Abi Umayya - 625–632
  7. Zaynab bint Jahsh - 627–632
  8. Juwayriyya bint al-Harith - 628–632
  9. Ramla bint Abi Sufyan - 628–632
  10. Rayhana bint Zayd - 629–631
  11. Safiyya bint Huyayy - 629–632
  12. Maymunah bint al-Harith - 630–632
  13. Maria al-Qibtiyya - 630–632

இன்னும் முஹம்மது செய்த திருமண ஒப்பந்தங்கள் பட்டியலையும், இதர பெண்கள் பற்றிய விவரங்களையும் மேற்கண்ட தொடுப்பில் சென்று படிக்கலாம். இந்த விவரங்கள் எந்தெந்த‌ இஸ்லாமிய மூல நூல்களிலிருந்து எடுக்கப்பட்டது என்றும் இந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.பி. 627ம் ஆண்டுக்கு பிறகு முஹம்மது எத்தனை திருமணங்களை புரிந்துள்ளார், விவாகரத்து புரிந்துள்ளார் என்பதை பாருங்கள்.

இதன்படி பார்த்தால், இஸ்லாமிய அறிஞர் ஸுயுதி சொல்வது தான் உண்மை என்று புரிகின்றது, அதாவது முதலாவது இரத்து செய்யும் வசனத்தை இறக்கிவிட்டு, அதன் பிறகு இரத்து செய்யப்பட்ட வசனத்தை அல்லாஹ் இறக்கியிருக்கின்றான் என்று நிருபனமாகின்றது.

ஒரு இறைவன் இப்படி செய்யமுடியுமா? ஆறறிவு படைத்த மனிதன் இப்படி தலைகீழாக செய்தால், மக்கள் அவனைப் பார்த்து சிரிப்பார்கள், அவன் ஒரு பைத்தியக்காரன் என்று பட்டம் சூட்டுவார்கள். ஆனால், இங்கு ஏழாவது அறிவு படைத்த அல்லாஹ்வே இப்படி செய்துள்ளான். முஸ்லிம்கள் அல்லாஹ்விற்கு என்ன பட்டத்தைச் சூட்டப்போகிறார்கள்?

அல்லாஹ்வின் இரத்து செய்யும் கோட்பாடு ஒரு பிழையான கோட்பாடு, முஸ்லிம்களே கேள்வி கேட்கவேண்டிய 

மூலம்: www.answering-islam.org/tamil/authors/umar/arabic_quran/abrogation-quran33-52.html

கேள்வி 503: குர்‍ஆனின் "முஹ்கமாத் என்றும் முதஷாபிஹாத்" வசனங்கள் என்றால் என்ன? 

பதில் 503: குர்‍ஆனில் இரண்டு வகையான வசனங்களை இறக்கியுள்ளதாக அல்லாஹ் கூறுகின்றான்.

  • முதல் வகை: முஹ்கமாத் வசனங்கள்

  • இரண்டாம் வகை: முதஷாபிஹாத் வசனங்கள்

இந்த விவரத்தை குர்‍அன்  3:7ல் காணலாம்:

3:7. (நபியே!) அ(ந்த இறை)வனே இவ்வேத நூலை உம்மீது இறக்கியருளினான். இதில் இருவிதமான வசனங்கள் உள்ளன. ஒன்று: “முஹ்கமாத்”* எனும் வசனங்களாகும். அவைதாம் வேதத்தின் அடிப்படை. இரண்டாவது: “முதஷாபிஹாத்”• எனும் வசனங்களாகும். எவர்களுடைய இதயங்களில் கோளாறு உள்ளதோ அவர்கள் குழப்பம் செய்யும் நோக்கில் முதஷாபிஹான வசனங்களைத் தேடித்திரிந்து கொண்டும், அவற்றின் கருத்தைத் திரித்துக் கூற முயற்சி செய்து கொண்டுமிருப்பார்கள். எனினும், அவற்றின் உண்மைப் பொருளை அல்லாஹ்வை அன்றி எவரும் அறியார்! இதற்கு மாறாக, அறிவுத் திறன் மிக்கவர்கள், “இவற்றை நாங்கள் நம்புகின்றோம்; இவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து அருளப்பட்டவைதாம்” என்று கூறுகிறார்கள். மேலும் உண்மை யாதெனில், அறிவாளிகள் தாம் (எதிலும்) சரியான படிப்பினை பெறுகின்றார்கள்.( இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்)

அதாவது, குர்‍ஆனின் சில வசனங்கள் மிகவும் தெளிவான பொருள் உடையதாக இருக்கும், இப்படிபப்ட்ட வசனங்களை "முஹ்கமாத்" என்று குர்‍ஆன் அழைக்கிறது. ஆனால், வேறு சில வசனங்களுக்கு தெளிவாக பொருள் இருக்காது, அல்லது பல அர்த்தங்கள் கொள்ளும் வகையில் அவைகள் இருக்கும், இவைகளை "முதஷாபிஹாத்" என்று அழைக்கப்படுகிறது.

முஸ்லிம் அறிஞர்களிடையே கருத்து வேறு: 

"முதஷாபிஹாத்" வசனங்களின் பொருள் அல்லாஹ்விற்கு மட்டுமே தெரியும், வேறு யாருக்கும் தெரியாது என்று ஒரு சாரார் சொல்கிறார்கள். இன்னொரு சாரார் 'அல்லாஹ்விற்கும் கற்றறிந்த அறிஞர்களுக்கும்' அவைகளின் அர்த்தம் தெரியும் என்று சொல்கிறார்கள்.

பிஜே தமிழாக்கத்தில் இந்த குர்‍ஆன் 3:7ஐ வாசிப்போம்.

3:7. (முஹம்மதே!) அவனே உமக்கு இவ்வேதத்தை அருளினான். அதில் உறுதி செய்யப்பட்ட வசனங்களும் உள்ளன. அவையே இவ்வேதத்தின் தாய். இரு கருத்தைத் தருகின்ற மற்றும் சில வசனங்களும் உள்ளன. உள்ளங்களில் கோளாறு இருப்போர் குழப்பத்தை நாடியும், அதற்கேற்ப விளக்கத்தைத் தேடியும் அதில் இரு கருத்துடையவற்றைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வையும், கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர அதன் விளக்கத்தை (மற்றவர்கள்) அறிய மாட்டார்கள். அவர்கள் "இதை நம்பினோம்; அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையே'' எனக் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர (மற்றவர்கள்) சிந்திப்பதில்லை.

இஸ்லாமிய அறிஞர் பிஜே அவர்களின் விளக்கவுரையின் படி " அல்லாஹ்வையும், கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர அதன் விளக்கத்தை (மற்றவர்கள்) அறிய மாட்டார்கள்" என்பதாகும். மேலே படித்த ஐஎஃப்டி, மற்றும் இதர தமிழாக்கங்களின் படி, "அவற்றின் உண்மைப் பொருளை அல்லாஹ்வை அன்றி எவரும் அறியார்!" என்பதாகும்.

குர்‍ஆனே தனக்குத்தானே முரண்படுகின்றதா?

நாம் மேலே பார்த்த வசனத்தின்படியும் (3:7), முஸ்லிம் அறிஞர்களின் படியும், குர்‍ஆனில் உள்ளவற்றில் அல்லாஹ்விற்கு மட்டுமே பொருள் தெரிந்த வசனங்கள் உள்ளன, அவைகளை மற்றவர்கள் புரிந்துக்கொள்ள முடியாது. ஆனால், அதே குர்‍ஆனில் உள்ள 16:89ம் வசனத்தின் படி " அது(குர்‍ஆனே), யாவற்றையும் மிகத் தெளிவாக விவரிக்கக்கூடியதாய் இருக்கிறது."  சொல்லப்பட்டுள்ளது.  இதே போன்று குர்‍ஆன் 11:1ம் வசனமும் இதையேச் சொல்கிறது.

16:89. (நபியே! மறுமை நாளைக் குறித்து இவர்களுக்கு எச்சரிக்கை செய்து விடும்:) அந்நாளில் ஒவ்வொரு சமூகத்திலேயும் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்லக்கூடிய ஒருவரை அவர்களிலிருந்தே நாம் எழுப்புவோம். மேலும், இந்த மக்களைக் குறித்து சாட்சி வழங்க உம்மை நாம் கொண்டு வருவோம். (இவ்வாறு சாட்சி அளிப்பதற்கான முன்னேற்பாடாகத்தான்) உமக்கு இவ்வேதத்தை நாம் இறக்கியருளியுள்ளோம். அது, யாவற்றையும் மிகத் தெளிவாக விவரிக்கக்கூடியதாய் இருக்கிறது. முற்றிலும் (இறைவனுக்கு) கீழ்ப்படிந்து வாழும் மக்களுக்கு இது நேர்வழி காட்டக்கூடியதாகவும், அருளாகவும், ஒரு நற்செய்தியாகவும் இருக்கிறது. (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்).

தமிழாக்கம்வசனம்
முஹம்மது ஜான்16:89 ". . .மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும்,. . .”
அப்துல் ஹமீது பாகவி16:89 ". . . (நபியே!) ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக விவரிக்கக்கூடிய இவ்வேதத்தை நாம்தாம் உங்கள்மீது இறக்கி இருக்கின்றோம். . .”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)16:89 “. . . (நபியே!) ஒவ்வொரு விஷயத்திற்கும் தெளிவாகவும். . . “
முஹம்மது ஜான் 11:1. அலிஃப், லாம், றா. (இது) வேதமாகும்; இதன் வசனங்கள் (பல்வேறு அத்தாட்சிகளால்) உறுதியாக்கப்பட்டு பின்னர் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன-. . .
அப்துல் ஹமீது பாகவி11:1. அலிஃப்; லாம்; றா. (இது) வேத நூல். அனைத்தையும் நன்கறிந்த ஞானவானால் இதன் வசனங்கள் (பல அத்தாட்சிகளைக் கொண்டு) உறுதி செய்யப்பட்ட பின்னர் (தெளிவாக) விவரிக்கப் பட்டுள்ளன.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) 11:1 அலிஃப் லாம் றா. (இது அல்லாஹ்வின்) வேதம், இதன் வசனங்கள் உறுதியாக்கப்பட்டு, அதன்பின்னர் அவை தீர்க்கமான அறிவுடையவன், நன்கறிந்தவனிடமிருந்து தெளிவு செய்யப்பட்டுள்ளன

இதன்படி பார்த்தால், குர்‍ஆன் 3:7க்கு முரணாக குர்‍ஆன் 16:89ம் வசனமும், 11:1ம் வசனமும் கூறுகின்றது என்று பொருள் கொள்ளமுடிகின்றதல்லவா?

கேள்வி 504:  முஸ்லிம்களின் படி,  "குர்‍ஆனின் ஒரு குறிப்பிட்ட‌ அத்தியாயம், மொத்த குர்‍ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு சமமாக கருதப்படுகின்றது, அது எந்த அத்தியாயம்”?

பதில் 504: முஸ்லிம்களின் படி, குர்‍ஆனின் 112வது அத்தியாயம், மொத்த குர்‍ஆனின் மூன்றில் ஒரு பங்கிற்கு சமம் என்று கருதப்படுகின்றது.

இந்த அத்தியாயத்தில் 4 வசனங்கள் உள்ளன.

அத்தியாயத்தின் பெயர்: இஃக்லாஸ் (ஏகத்துவம்)

112:1. (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.

112:2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.

112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.

112:4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

கேள்வி 505:   குர்‍ஆன் 112:1ல் வரும் "அஹத்" என்ற வார்த்தையின்படி, அல்லாஹ் ஒருவனல்ல, அவன் பலரில் (ஆயிரத்தில்) ஒருவன் என்று பொருள் வருகிறது என்கிறார்கள், இது உண்மையா? 

பதில் 505: அல்லாஹ்வின் தனித்தன்மையைப் பற்றி குர்‍ஆனில் கீழ்கண்டவிதமாக படிக்கிறோம்:

குர்‍ஆன் 112:1 (ஐந்து தமிழாக்கங்கள்):

  • முஹம்மது ஜான் தமிழாக்கம்: (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
  • அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்: (நபியே! மனிதர்களை நோக்கி,) நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ் ஒருவன்தான்
  • IFT- தமிழாக்கம்: கூறுவீராக! அவன் அல்லாஹ், ஏகன்,
  • சவூதி தமிழாக்கம்: (நபியே!) நீர் கூறுவீராக அவன் “அல்லாஹ்” ஒருவனே
  • பிஜே தமிழாக்கம்: "அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராக! 

இந்த அத்தியாயத்திற்கு இரண்டு பெயர்கள் உண்டு: ஸூரத்துல் இஃக்லாஸ் (ஏகத்துவம்) மற்றும் ஸூரத்துல் தௌஹித். நான்கு வசனங்கள் கொண்ட‌ இந்த சிறிய ஸூரா பற்றி ஒரு இஸ்லாமிய அறிஞர் கீழ்கண்டவாறு கூறினார்:

இறைவன் என்பதற்கான மிகச்சுருக்கமான வரையறை:

இஸ்லாமின் இறைவன் பற்றிய மிகவும் சுருக்கமான வரையறையை குர்‍ஆனின் " இஃக்லாஸ்" என்ற 112வது அத்தியாயத்தில் காணலாம்:

ஸூரத்துல் இஃலாஸ் - இறையியலின் உரைக்கல்:

இறையியலின் உரைக்கல் என்று குர்‍ஆனின் 112வது அத்தியாயமாகிய ஸூரத்துல் இஃக்லஸை கூறலாம்.

கிரேக்க மொழியில் "தியோ" என்றால் இறைவன் என்று பொருள், 'லாஜி' என்றால் படிப்பு  என்று பொருள். ஆக, தியாலஜி என்றால் இறையியல் என்று பொருள். முஸ்லிம்களை பொருத்தமட்டில், சர்வ வல்லவரான அல்லாஹ்வின் இறையியல் பற்றி அந்த நான்கு வார்த்தைகள் கொண்ட வசனமே ஒரு உரைக்கல்லாக போதுமானதாக உள்ளது. யார் யாரெல்லாம் தெய்வத்தன்மைக்கு போட்டியிருகின்றார்களோ, அவர்களை இந்த அமிலச் சோதனையில் போட்டு எடுக்கவேண்டும். இந்த அத்தியாயத்தில் கொடுக்கப்பட்ட அல்லாஹ்வின் குணங்கள் தனித்தன்மை வாய்ந்தவைகளாக உள்ளன. இதனால் தங்களை தெய்வங்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்களையும், பொய்யான தெய்வங்களை சுலபமாக அடையாளம் கண்டு அவர்களை புறக்கணிக்க முடியும்.

(டாக்டர் ஜாகிர் நாயக், இஸ்லாமில் இறைவன் பற்றிய கோட்பாடு - இந்த மூல தொடுப்பை சொடுக்கும் போது கீழ்கண்ட செய்தி வருகின்றது 

“The URL has been blocked as per the instructions of the Competent Government Authority/ in compliance to the orders of Court of Law.”

இன்றைய தேதியின் படி ஜாகிர் நாயக்கின் தளம் அரசாங்கத்தால் முடக்கப்பட்டுள்ளது, ஏன் என்று நம் அனைவருக்கும் தெரியும்.).

நாம் மேலே கண்ட 1வது  வசனத்தில் "அல்லாஹ் ஒருவனே" என்று அரபு மூலத்தில் சொல்லப்படவில்லை என்பது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.  உண்மையில் அரபியில் அதன் பொருள் "பலரின் அல்லாஹ் ஒருவன் (Say: He, Allah, is one of)" என்பதாகும்.

இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்ட அரபி வார்த்தை "அஹத்" என்பதாகும். குர்‍ஆனில், இந்த வசனத்தின் அரபி ஒலிப்பெயர்ப்பு கீழ்கண்ட விதமாக உள்ளது:

குல் ஹுவ அல்லாஹு அஹத் (துன்)” 

இதன் பொருள்:

கூறுவீராக: அவன், அல்லாஹ், பலரின் ஒருவனாக இருக்கிறான்

"Say: He, Allah, is one of."

கிறிஸ்தவ எழுத்தாளரும், அரபி மொழி பேச்சாளருமான‌ அப்துல்லாஹ் அல் அரபி (Abdullah Al Araby) எழுதுகிறார்:

குர்ஆனின் வசனங்களை வேண்டுமென்றே தவறாக மொழிப்பெயர்க்கின்ற இந்த செயல் மீது ஒரு ஆழமான ஆய்வு நடத்தப்பட்டு ஆய்வறிக்கை சமர்ப்பிக்கவேண்டும், அவ்வளவு பெரிய தலைப்பு இது. இந்த கட்டுரைக்காக, ஒரு சில உதாரணங்களை மட்டுமே நான் இங்கு தருகிறேன்.

குர்‍ஆன் 112:1ம் வசனம்: நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே

அரபி மூலத்தில் "ஒருவனே" என்ற தமிழாக்கம் செய்யப்பட்ட வார்த்தை "ஒருவனே" என்ற அரபி வார்த்தையில்லை, அது " அஹத்  - பலரில் ஒருவன் - One of" என்ற  பொருள்படும் வார்த்தையாகும். தமிழாக்கம் செய்த முஸ்லிம், அஹத் என்ற வார்த்தையை சரியாக மொழியாக்கம் செய்திருந்தால், அது ஷிர்க் என்ற பெரும் பாவத்தை செய்வதற்கு சமமானதாக அந்த வசனம் மாறிவிடும். உண்மையில் அஹத் என்ற வார்த்தை, அல்லாஹ்வை பலரோடு ஒப்பிட்டு, பலரில் அல்லாஹ்வும் ஒருவன் என்ற பொருளில் தான் அமைந்துள்ளது. ("Nikah"- The Islamic "N" Word; What Does It Exactly Mean?).

ஒருவேளை அல்லாஹ் இதனை சரியான‌ முறையில் அரபியில் சொல்லவேண்டுமென்றால், "அல்லாஹு அல் அஹத்" அதாவது "அவன் அல்லாஹ், அவன் ஒருவனே" என்று சொல்லியிருந்தால் பிரச்சனை இல்லை. 

இந்த பிரச்சனையை சரி செய்ய, கீழ்கண்ட ஆங்கில மொழியாக்கம் செய்தவர்கள், தில்லுமுல்லு செய்து " தி - The" என்ற ஆங்கில வார்த்தையை உள்ளே நுழைத்து பொருளை சரி செய்கிறார்கள்.

  • Say (O Muhammad): "He is Allah, (the) One. (Hilali-Khan Translation)
  • Say: He is Allah, the One! (Pickthall - Translation)
  • Say `He is ALLAH, the One! (Sher Ali - Translation)

மேலும் சில முஸ்லிம் அறிஞர்கள், இந்த பிழையை மறைப்பதற்காக, முழுவாக்கியத்தையே மாற்றி அமைத்திருக்கிறார்கள்.

  • Proclaim, "He is the One and only GOD. (Khalifa - Translation)
  • Say, [God] is one God; (Sale - Translation)

குர்‍ஆனை கொடுத்த அல்லாஹ், இந்த பிரச்சனையையும், குழப்பத்தையும் நீக்குவதற்கு, இந்த வசனத்தை கீழ்கண்டவாறு இறக்கி இருந்திருக்கலாம்:

குல் ஹுவ அல்லாஹு அல் வாஹித்(துன்)

இதன் பொருள்:  கூறுவீராக, அவன் அல்லாஹ், அவன் ஒருவனே ("Say, he is Allah, the One,")

அல்லது

கூறுவீராக, அவன் அல்லாஹ் ஒருவனே ("Say he, Allah, is the One.")

மேலும் குர்‍ஆன் ஆக்கியோன், "அல்" என்ற எழுத்தையும் சேர்க்காமல், "குல் ஹுவ அல்லாஹு வாஹிதுன்(Qul huwa Allahu Wahid(un))" என்று வசனத்தை இறக்கியிருந்திருக்கலாம்.

மைக்கேல் பி. ஷுப் தம்முடைய "True Belief - a New Translation and Commentary on Sura 112" என்ற ஆய்வுக் கட்டுரையில் பக்கம் 81ல் கீழ்கண்டவாறு கூறுகின்றார்: (As Michael B. Schub put in his paper "True Belief - a New Translation and Commentary on Sura 112", ZAL, 22 (1990), p. 81:)

  • "ahadun: The rules of the `Arabiyya [i.e. Classical Arabic] require wahidun here."
  • "அஹதுன்": பழமை வாய்ந்த மூல அரபியில் இந்த இடத்தில் "வாஹிதுன்" என்று வந்திருக்கவேண்டும்.

குர்‍ஆனில் வாஹித் என்ற வார்த்தை அல்லாஹ்வின் ஏகத்துவத்திற்கு பயன்படுத்தப்பட்ட வசனங்கள்

இன்னும் சில சான்றுகளை குர்‍ஆனிலிருந்து காண்போம். கீழ்கண்ட வசனங்களில் "அல்லாஹ் ஒருவனே" என்பதை குறிக்க "வாஹித்" என்ற வார்த்தை சரியாக பயன்படுத்தப்பட்டுள்ளதை, கவனிக்கவும்.

2:133. யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம் “எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?” எனக் கேட்டதற்கு, “உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே (ilahan wahidan இலாஹன் வாஹிதன்) -வணங்குவோம் அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்” எனக் கூறினர்.

2:163. மேலும், உங்கள் நாயன் ஒரே நாயன்(Wa-ilahukum ilahun wahidun - வ இலாஹுகும் இலாஹுன் வாஹிதுன்); அவனைத் தவிர வேறு நாயனில்லை அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.

4:171. . . . - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்(Allahu ilahun wahidun- அல்லாஹு இலாஹுன் வாஹிதுன்); அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.

5:73. நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் காஃபிர்களாக (நிராகரிப்பவர்களாக) ஆகிவிட்டார்கள்; ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர வேறு நாயன் இல்லை(wama min ilahin illa ilahun wahidun - வமா மின் இலாஹின் இல்லா இலாஹுன் வாஹிதுன்); அவர்கள் சொல்வதை விட்டும் அவர்கள் விலகவில்லையானால் நிச்சயமாக அவர்களில் காஃபிரானவர்களை துன்புறுத்தும் வேதனை கட்டாயம் வந்தடையும்.

6:19. . . .நான் (அவ்வாறு) சாட்சி சொல்ல முடியாது என்றும் கூறுவீராக; வணக்கத்திற்குரியவன் நிச்சயமாக அவன் ஒருவன் தான்; அவனுக்கு நீங்கள் இணைவைப்பதிலிருந்து நான் நிச்சயமாக விலகிக் கொண்டவனே” என்று கூறிவிடும்(qul la ashhadu qul innama huwa ilahun wahidun - குல் ல அஷ்ஹது குல் இன்னமா ஹுவ இலாஹுன் வாஹிதுன்) .

38:5. “இவர் (எல்லாத்) தெய்வங்களையும் ஒரே நாயனாக(ilahan wahidan - இலாஹன் வாஹிதன்) ஆக்கிவிட்டாரா? நிச்சயமாக இது ஓர் ஆச்சரியமான விஷயமே! (என்றும் கூறினர்).

(அனைத்து வசனங்களும் முஹம்மது ஜான் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது)

இங்கு கூர்ந்து கவனிக்கவேண்டிய ஒரு சுவாரஸ்மான விவரம் என்னவென்றால், அல்லாஹ்வின் ஏகத்துவம் பற்றி குர்‍ஆன் எங்கு பேசினாலும், அங்கு "வாஹித்" என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஒரு இடத்தில் மட்டும் அதாவது குர்‍ஆன் 112:1ல் மட்டும் அது "அஹத்(அனேகரில் இவனும் ஒருவன்)" என்று தவறாக பயன்படுத்தப்பட்டு  உள்ளது.

அஹத் என்ற வார்த்தை குர்‍ஆனில் அனைத்து இடங்களிலும் (74), "பலரில் ஒருவர்/உங்களில் ஒருவர்/யாராகிலும்" என்ற பொருளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. குர்‍ஆனில் அஹத் என்ற வார்த்தை இடம்பெறும் வசனங்கள் அனைத்தையும் ஆய்வு செய்தால், அத்ஹு அல் அரபி என்பவர் சொன்ன கருத்தையே பிரதிபலிப்பதாக உள்ளது.  அஹத் என்ற வார்த்தை இடம் பெறும் வசனங்கள் அனைத்திலும் "அனேகரில் ஒருவர்" அல்லது ஒரு குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.  அஹத் என்ற வார்த்தை "ஒரே ஒருவர் அல்லது  தனித்தன்மை வாய்ந்த ஒருவர்" என்ற பொருளில் எங்கும் பயன்படுத்தப்படவில்லை (112:1ல் தவிர).

அஹத் வார்த்தை வரும் குர்‍ஆன் வசன சான்றுகள்:

ஒவ்வொருவரும் (ahaduhum - அஹதுஹும்):

2:96. அவர்கள், மற்ற மனிதர்களைவிட, இணை வைக்கும் முஷ்ரிக்குகளையும் விட (இவ்வுலக) வாழ்க்கையில் பேராசை உடையவர்களாக இருப்பதை (நபியே!) நீர் நிச்சயமாகக் காண்பீர்; அவர்களில் ஒவ்வொருவரும் (ahaduhum - அஹதுஹும்) ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் என ஆசைப்படுகிறார்கள்; ஆனால் அப்படி அவர்களுக்கு நீண்ட வயது கொடுக்கப்பட்டாலும், அவர்கள் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது; இன்னும் அல்லாஹ் அவர்கள் செய்வதையெல்லாம் கூர்ந்து பார்ப்பவனாகவே இருக்கிறான்.

எவருக்கும்(ahadin - அஹதின்):

2:102. . . .. எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும்(ahadin - அஹதின்) எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?

ஒருவருக்கிடையேயும்(ahadin - அஹதின்):

2:136. (முஃமின்களே!)“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும்(ahadin - அஹதின்) நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக.

எவர் ஒருவரையும்(ahadin- அஹதின்):

2:285. (இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும்(ahadin- அஹதின்) பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்” என்று கூறுகிறார்கள்.

இன்னொருவருக்கும்(ahadun - அஹதுன்):

3:73. “உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றுவோரைத் தவிர (வேறு எவரையும்) நம்பாதீர்கள்” (என்றும் கூறுகின்றனர். நபியே!) நீர் கூறும்: நிச்சயமாக நேர்வழியென்பது அல்லாஹ்வின் வழியே ஆகும்; உங்களுக்கு (வேதம்) கொடுக்கப்பட்டதுபோல் இன்னொருவருக்கும்(ahadun - அஹதுன்) கொடுக்கப்படுவதா அல்லது அவர்கள் உங்கள் இறைவன் முன் உங்களை மிகைத்து விடுவதா?” (என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.) நிச்சயமாக அருட்கொடையெல்லாம் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது; அதை அவன் நாடியோருக்கு வழங்குகின்றான்; அல்லாஹ் விசாலமான (கொடையளிப்பவன்; யாவற்றையும்) நன்கறிபவன் என்று கூறுவீராக.

எவரொருவரையும்(ahadin - அஹதின்):

3:84. “அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும்(ahadin - அஹதின்) பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்; நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

எவரையும் (ahadin - அஹதின்):

3:153. (நினைவு கூறுங்கள்! உஹது களத்தில்) உங்கள் பின்னால் இருந்து இறைதூதர் உங்களை அழைத்துக் கொண்டிருக்க, நீங்கள் எவரையும் (ahadin - அஹதின்) திரும்பிப் பார்க்காமல் மேட்டின்மேல் ஏறிக் கொள்ள ஓடிக் கொண்டிருந்தீர்கள்; ஆகவே (இவ்வாறு இறை தூதருக்கு நீங்கள் கொடுத்த துக்கத்தின்) பலனாக இறைவன் துக்கத்தின்மேல் துக்கத்தை உங்களுக்குக் கொடுத்தான்; ஏனெனில் உங்களுக்குக் கிடைக்க வேண்டியது தவறி விட்டாலோ, உங்களுக்குச் சோதனைகள் ஏற்பட்டாலோ நீங்கள் (சோர்வும்) கவலையும் அடையாது (பொறுமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்); இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கு அறிபவனாக இருக்கின்றான்.

எவரையும்(ahadin - அஹதின்):

4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும்(ahadin - அஹதின்) பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.

நீங்கள் (aḥadun -அஹதுன்): உங்களில் ஒருவர் என்று வந்திருக்கவேண்டும்! தமிழாக்கம் செய்தவர் "நீங்கள்" என்று எழுதியுள்ளார்.

4:43. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்; அன்றியும் குளிப்புக் கடமையாக இருக்கும்போது குளிக்கும் வரை (பள்ளிக்குள் செல்லாதீர்கள்; பள்ளியை) பாதையாக கடந்து சென்றால் தவிர. நீங்கள் நோயாளியாகவோ, யாத்திரையிலோ, மலஜலம் கழித்தோ(aḥadun minkum mina l-ghāiṭi - அஹதுன் மின்கும் மினால் க்ஹாடி), பெண்களைத் தீண்டியோ இருந்து (சுத்தம் செய்து கொள்ள) தண்ணீரை பெறாவிடின் சுத்தமான மண்ணைத் தொட்டு உங்களுடைய முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவி “தயம்மும்” செய்து கொள்ளுங்கள்; (இதன்பின் தொழலாம்) நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.

எவரும்(ahadun - அஹதுன்):

5:6. முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) - நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்; தவிர நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும்(ahadun - அஹதுன்) மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும்  . . .

எவருமே(ahadin - அஹதின்):

7:80. மேலும் லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்;) அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: உலகத்தில் எவருமே(ahadin - அஹதின்) உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவா முனைந்தீர்கள்?”

யாரேனும் (ahadun - அஹதுன்):

9:6. (நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் (ahadun - அஹதுன்) உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக; அதன் பின் அவரை அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக - ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.

யாராவது (ahadin - அஹதின்):

9:84. அவர்களில் யாராவது (ahadin - அஹதின்) ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக நீர் ஒருக்காலும் (ஜனாஸா) தொழுகை தொழவேண்டாம்; இன்னும் அவர் கப்ரில் (பிரார்த்தனைக்காக) நிற்க வேண்டாம்; ஏனென்றால் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்துப் பாவிகளாகவே இறந்தார்கள்.

யாராவது(ahadin - அஹதின்):

9:127. யாதொரு (புதிய) அத்தியாயம் இறக்கப்பட்டால் அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: “உங்களை யாராவது(ahadin - அஹதின்) பார்த்து விட்டார்களோ?” என்று கேட்டுக் கொண்டே திரும்பி(ப் போய்) விடுகின்றனர்; அல்லாஹ் அவர்களுடைய நெஞ்சங்களை (ஒளியின் பக்கத்திலிருந்து) திருப்பி விட்டான் - (காரணமென்னவெனில்) அவர்கள் சத்தியத்தை அறிந்து கொள்ள முடியாத மக்களாக இருக்கின்றனர்.

யாரும்(ahadun - அஹதுன்):

11:81. (விருந்தினராக வந்த வானவர்கள்) கூறினார்கள்: “மெய்யாகவே நாம் உம்முடைய இறைவனின் தூதர்களாகவே இருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள் உம்மை வந்தடைய முடியாது; எனவே இரவின் ஒரு பகுதி இருக்கும்போதே உம் குடும்பத்துடன் (இவ்வூரை விட்டுச்) சென்றுவிடும்! உம்முடைய மனைவியைத் தவிர, உங்களில் யாரும்(ahadun - அஹதுன்) திரும்பியும் பார்க்க வேண்டாம். நிச்சயமாக அவர்களுக்கு வரக்கூடிய ஆபத்து அவளையும் பிடித்துக் கொள்ளும். (வேதனை வர) அவர்களுக்கு நிச்சயமாக வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற்காலையாகும்; விடியற்காலை சமீபித்து விடவில்லையா?”

எவரும் (ahadun - அஹதுன்):

15:65. ஆகவே இரவில் ஒரு பகுதியில் உம்முடைய குடும்பத்தினருடன் நடந்து சென்று விடும்; அன்றியும் (அவர்களை முன்னால் செல்ல விட்டு) அவர்கள் பின்னே நீர் தொடர்ந்து செல்லும். உங்களில் எவரும் (ahadun - அஹதுன்) திரும்பிப் பார்க்க வேண்டாம். நீங்கள் ஏவப்படும் இடத்திற்கு சென்று விடுங்கள் என்று அ(த் தூது)வர்கள் கூறினார்கள்.

ஒருவனுக்கு(ahaduhum  - அஹதுஹும்):

16:58. அவர்களில் ஒருவனுக்கு(ahaduhum  - அஹதுஹும்) பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது - அவன் கோபமுடையவனாகிறான்.

ஒருவரையேனும் (ahadin - அஹதின்):

19:98. அவர்களுக்கு முன்னர், எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்திருக்கிறோம்; அவர்களில் ஒருவரையேனும் (ahadin - அஹதின்) நீர் பார்க்கிறீரா? அல்லது அவர்களுடைய இலேசான சப்தத்தை நீர் கேட்கிறீரா?

எவரும் (ahadin - அஹதின்):

24:21. ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்க வற்றையும், (செய்ய) நிச்சயமாக ஏவுவான்; அன்றியும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் (ahadin - அஹதின்) எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையடைந்திருக்க முடியாது - எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் தூய்மைப் படுத்துகிறான் - மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.

எவருமே (ahadin - அஹதின்):

29:28. மேலும், லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பி வைத்தோம்); அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: “நிச்சயமாக நீங்கள் உலகத்தாரில் எவருமே (ahadin - அஹதின்) உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலை செய்ய முனைந்து விட்டீர்கள்.

எவர் (ahadin - அஹதின்):

33:40. முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் (ahadin - அஹதின்) ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.  

வேறெவரும் (ahadin - அஹதின்):

35:41. நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான்; அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் (ahadin - அஹதின்) அவ்விரண்டையும் தடுத்து நிறுத்தமுடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்வன்.

ஒருவனுக்கு (ahaduhum – அஹதுஹும்):

43:17. அர் ரஹ்மானுக்கு அவர்கள் எதனை ஒப்பாக்கினார்களோ அதை (அதாவது பெண் குழந்தையை) கொண்டு அவர்களில் ஒருவனுக்கு (ahaduhum – அஹதுஹும்)  நற்செய்தி கூறப்படும்பொழுது அவனுடைய முகம் கருத்துப் போய்விடுகின்றது. மேலும் அவன் கோபம் நிரம்பியவனாகவும் ஆகிவிடுகின்றான்.

எவரும்(ahadin - அஹதின்):

69:47. அன்றியும், உங்களில் எவரும்(ahadin - அஹதின்) (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை.

ஒருவரும்  (ahadun - அஹதுன்):

72:22. கூறுவீராக: “நிச்சயமாக அல்லாஹ்வை விட்டும் ஒருவரும்  (ahadun - அஹதுன்) என்னைப் பாதுகாக்க மாட்டார்; இன்னும், அவனையன்றி ஒதுங்குந் தலத்தையும் நான் காணமுடியாது.

எவனும் (ahadun - அஹதுன்):

89:25. ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் (ahadun - அஹதுன்) வேதனை செய்யமாட்டான்.

எவனும் (ahadun - அஹதுன்):

89:26. மேலும், அவன் கட்டுவது போல் வேறு எவனும் (ahadun - அஹதுன்) கட்டமாட்டான்.

ஒருவரும் (ahadun - அஹதுன்):

90:5. “ஒருவரும் (ahadun - அஹதுன்), தன் மீது சக்தி பெறவே மாட்டார்” என்று அவன் எண்ணிக் கொள்கிறானா?

ஒருவரும்  (ahadun - அஹதுன்):

90:7. தன்னை ஒருவரும்  (ahadun - அஹதுன்) பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?

அவனுக்கு(ahadun - அஹதுன்):

112:4. அன்றியும், அவனுக்கு(ahadun - அஹதுன்)  நிகராக எவரும் இல்லை.

குர்‍ஆனில் "அஹத்" என்ற வார்த்தை வரும் ஒவ்வொரு வசனத்தை ஆய்வு செய்தாலும், அது "அனேகரில் ஒருவர் பற்றியே அல்லது ஒரு குறிப்பிட்ட மக்களில் ஒருவர் பற்றியே" குறிப்பிடுகிறது என்பதை காணலாம். ஒரே ஒரு வசனத்தில் கூட இந்த அஹத் என்ற வார்த்தைக்கு "ஒரே ஒருவன், ஒருவன் மட்டும், தனிப்பட்ட ஒருவன்" என்று பொருள் வருவதில்லை. நாம் மேலே பார்த்த அல் அரபி என்பவரின் கூற்று தான் உண்மை என்று இவைகள் நிருபிக்கின்றன.

குர்‍ஆனின் மிகப்பெரிய இலக்கண பிழை:

அடிப்படையில் "குர்‍ஆனில் ஒரு மிகப்பெரிய மோசமான இலக்கண பிழை இருப்பதை இது நிருபிக்கிறது, மேலும் இது இஸ்லாமின் ஏகத்துவ கொள்கையின் அஸ்திபாரத்தை தகர்த்து விடுவதாக அமைந்துவிட்டது".

எப்படி இந்த பிழை குர்‍ஆனில் நுழைந்தது?

இந்த பிழை (அஹத் என்ற வார்த்தை) குர்‍ஆனின் 112:1ல் நுழைந்ததற்கு "யூதர்களுடன் முஹம்மது (அ) குர்‍ஆனின் ஆசிரியர் கொண்டிருந்த தொடர்பு கூட‌ ஒரு காரணமாக இருக்கலாம்" என்று நான் கருதுகிறேன், இது உண்மையாகவும் இருக்கலாம். அதாவது முஹம்மது யூதர்களிடமிருந்து அவர்களின் 'ஒரே தெய்வ விசுவாசப் பிரமாணத்தை(the Jewish Shema - ஷேமா)' கேள்விப்பட்டு இருந்திருக்கவேண்டும்.

யூதர்களின் விசுவாசப்பிரமானம் உபாகமம் 6:4ம் வசனத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அங்கு, யெகோவா தேவனின் தனித்தன்மையை வெளிப்படுத்த 'எகாத்' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

யூதர்களின் விசுவாச பிரமாண வசனத்தை எபிரேய மொழியிலும், ஒலிப்பெயர்ப்பிலும் கிழே கொடுத்துள்ளேன்.

எபிரேய ஒலிப்பெயர்ப்பு: ஷெமா இஸ்ரயேல், யாவே எலோஹினு யாவே எகாத்

உபாகமம் 6:4 இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.

Translilteration English: Shema Yisrael Yahweh Elohenu Yahweh Echad

English: Hear O Israel, Yahweh Our God Yahweh is One.

யூதர்கள் "எகாத்" என்ற வார்த்தையை தங்கள் தெய்வத்தின் ஏகத்துவத்தை வெளிக்காட்ட பயன்படுத்துவதை முஹம்மது கவனித்து இருந்துள்ளார். அதன் பிறகு தன்னுடைய அல்லாஹ்விற்கு இதற்கு சமமான வார்த்தையை அரபியில் பயன்படுத்தலாம் என்று நினைத்து, 'அஹத்' என்ற வார்த்தையை அல்லாஹ்விற்கு பயன்படுத்திவிட்டிருக்கிறார். இந்த வார்த்தையின் பயன்பாடு அவரது ஏகத்துவ நிலைப்பாட்டை தகர்த்துவிடும் என்பதையும், குர்‍ஆனின் அரபி மொழி இலக்கணத்தை கேள்விக்குறியாக்கிவிடும் என்று அவர் நினைத்துக் கூட பார்க்கவில்லை.  அதாவது அஹத் என்ற வார்த்தையை அல்லாஹ்விற்கு சூட்டி, அவர் தான் நம்பிக்கொண்டு இருந்த ஏகத்துவ கோட்பாட்டை அழித்துவிட்டார்.

அஹத் என்ற வார்த்தை அல்லாஹ்வின் ஏகத்துவத்தை நிலைநாட்ட தவறாக பயன்படுத்தியதற்கு இன்னொரு காரணமும் இருக்கலாம். முஹம்மதுவோ அல்லது குர்‍ஆனை கொடுத்தவனோ, குர்‍ஆன் வசனங்களில் முதல் வாக்கியத்திற்கும் இரண்டாம் வாக்கியத்திற்கு இடையே "வரிகளின் ராகம் - எதுகை/மோனை சுவையாக இருக்கும்" என்பதால் கூட இப்படி 'அஹத்' என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்திருக்கலாம். 

இரண்டாம் வசனத்தின்  (112:2)  கடைசியில் "ஸமத்" என்று வார்த்தை முடியும், அதற்காக முதல்(112:1) வாக்கியத்தில் "அஹத்" என்று ராகத்திற்காக பயன்படுத்தி இருந்திருக்கலாம்.

தவறான வார்த்தையை பயன்படுத்தி, இந்த இலக்கண பிழையை செய்வதைக் காட்டிலும், "அல்-வாஹித்" என்றோ "அல்-அஹத்" என்றோ எழுதியிருந்தால், இந்த பிழை நீங்கியிருக்கும், அதே நேரத்தில் ராகமும் ஓரளவிற்கு சரியாக வந்திருக்கும்.

எது எப்படியிருந்தாலும், குர்ஆனை ஒரு தலைசிறந்த படைப்பாகவோ அல்லது அரபு இலக்கியத்தின் சிகரமாகவோ கருதமுடியாது என்பதை இதுவரை பார்த்த விவரங்கள் காட்டுகின்றன.  அல்லாஹ்வின் இயல்புடன் தொடர்புடைய மிக முக்கியமான வசனத்தில் ஒரு வார்த்தையை தவறாகப் பயன்படுத்தியதிலிருந்து "குர்ஆன் இறைவனிடமிருந்து வரவில்லை, அதன் ஆக்கியோன் சர்வஞானியான இறைவன் அல்ல" என்பது தெளிவாக புரிகின்றது.  இந்த ஒரு உதாரணமே, குர்‍ஆன் இறைவேதமல்ல என்பதற்கு தெளிவான சான்றாகும். யாரோ ஒருவரின் தவறான கண்டுபிடிப்பு தான் குர்‍ஆன். இது இறைவனின் வார்த்தைகள் என்று தனது வாசகர்களை நம்ப வைக்க விரும்பிய ஒருவரின் அபூர்வமான கண்டுபிடிப்பு தான் குர்‍ஆன். ஆனால் இதுபோன்ற அடிப்படை இலக்கண தவறுகளைச் செய்து, குர்‍ஆனின் ஆசிரியர் தனக்குத் தானே நம்பிக்கை துரோகம் செய்துக்கொண்டார். மேலும் அவரது சமகாலத்தவர்களுக்கு மிகவும் தவறான செய்தியை கொடுத்தார். இதுமட்டுமா, தன்னுடைய கோட்பாடுகளை எதிர்க்கும் எதிரிகளின் கைகளில் ஒரு கூர்மையான ஆயுதத்தை அவரே தயார் செய்து கொடுத்தும்விட்டார்.  அதனை அவர் மீதே அவர்கள் பயன்படுத்த அனுமதியும் கொடுத்துவிட்டார்.

குர்‍ஆன் என்பது தெய்வீகமுள்ளது, அல்லாஹ் என்பவர் ஏகத்துவ இறைவன் என்று மற்றவர்களுக்கு எடுத்துக்காட்ட விரும்பிய குர்‍ஆனின் ஆசிரியர், தன் இலக்கண பிழையினால், வேறு ஒரு செய்தியை தன்னை அறியாமல் மக்களுக்கு கொடுத்துவிட்டார். குர்‍ஆனின் எதிரிகளுக்கு தேவையான சான்றுகளை குர்‍ஆனே கொடுத்தது போன்று ஆகிவிட்டது. இதனை ஆய்வு செய்யும் மக்கள், "அல்லாஹ் சரியாக குழம்பியுள்ளான், ஒரு இடத்தில் தான் மட்டுமே இறைவன் என்றுச் சொல்கிறான், ஆனால் வேறு இடத்தில் உள்ள இலக்கண பிழையினால், அல்லாஹ்வைத் தவிர வேறு தெய்ங்களும் இருக்கின்றன" என்று சொல்கின்ற அளவிற்கு குர்‍ஆனின் தரம் உள்ளது அவர்கள் சொல்லவைத்திருக்கிறது.

மேலதிக விவரங்களும் விமர்சனங்களும்: தவ்ஹீத்

சுவாரஸ்யமாக, அஹத் என்ற வார்த்தையின் பொருள் "பலரில் ஒருவர் அல்லாஹ்" என்பதற்கு மேலும் ஒரு சான்றும் உள்ளது. குர்‍ஆனின் 112வது அத்தியாயத்திற்கு சில முஸ்லிம் அறிஞர்கள் "தவ்ஹித்" என்ற பெயரையும் சூட்டியுள்ளார்கள் என்பதை நாம் இதற்கு முன்பு பார்த்தோம்.

இந்த தவ்ஹித் (தௌஹித்) என்ற வார்த்தைக்கு முஸ்லிம் அறிஞர்கள் "ஒற்றுமை" அல்லது "ஒன்று" என்று பொருள் கூறுகிறார்கள். இந்த வார்த்தை 'பலர் ஒன்றாக சேர்வது' அல்லது 'பல பெருட்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு குழுவாக இருப்பது' என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும்.

தவ்ஹீத் என்ற வார்த்தைப் பற்றி முஸ்லிம் அறிஞர்கள் சொல்லும் விளக்கத்தை படிப்போம்:

தவ்ஹீத் என்ற வார்த்தை வஹ்ஹத் என்ற வினைச்சொல்லிலிருந்து வந்தது, இதன் அர்த்தம் 'ஒன்றாக சேர்ப்பது' என்பதாகும். இஸ்லாமின் படி இதன் பொருள் "ஒருவரின் செயல்களில் (உள்நோக்கி மற்றும் வெளிப்புறமாக) அல்லாஹ்வின் ஒற்றுமையை உணர்ந்து வாழ்வதாகும்". தௌஹித் என்ற வார்த்தை குர்‍ஆனிலும் இல்லை, ஹதீஸ்களிலும் இல்லை. ஆனால், இதன் மூல வார்த்தையின் நிகழ்காலச் சொல்லை ஹதீஸ்களில் (சுன்னா) காணலாம்.

இறைத்தூதர் முஅத் இப்னு ஜபலை யெமனுக்கு ஆளுநராக அனுப்பும் போது (ஹிஜ்ரி 9), "நீங்கள் வேதக்காரர்களிடம் செல்கிறீர்கள், எனவே அவர்களை அல்லாஹ்விடம் ஒற்றுமையடைய (யுவஹ்ஹிது) வாருங்கள் என்று அழையுங்கள்" என்றார்.

மேலும் இந்த மேற்கோளையும் படிக்கவும்:

தவ்ஹீத்: வரையறை மற்றும் வகைகள்:

இஸ்லாம் தவ்ஹீத்ஐ நம்புகிறது. தவ்ஹீத் என்பது வெறும் ஏகத்துவ வாதம் அல்ல அதாவது ஒரே இறைவன் மீது வைக்கும் நம்பிக்கை மட்டுமல்ல, இதற்கும் அப்பாற்பட்டதை இஸ்லாம் நம்புகிறது. தவ்ஹீத் என்றால் 'ஒற்றுமைப்படுதல், ஐக்கியப்படுதல்' என்பதாகும். இந்த வார்த்தை வஹ்ஹத என்ற வார்த்தையிலிருந்து வந்தது, மேலும் இதன் பொருள் "ஒற்றுமைப்படுதல், ஒன்று சேர்த்தல்" என்பதாகும்.

Tauhiyd comes from the verb wahhad WHICH LITERALLY MEANS TO UNITE. In Islamic terminology, it means to realize and maintain the unity of Allâh in one's actions (inwardly and outwardly). The actual word tauhiyd does not occur in the Quran or Sunnah though the present tense of the verb (from which tauhiyd is derived) is used in Sunnah. The Prophet sent Muadh ibn Jabal as governor of Yemen in 9 A.H. He told him, "You will going to the people of the book, so first invite yuwahhidu Allâh [them to the assertion of the oneness of Allâh]".[1] (The Concept of Tauhiyd in Islam; capital emphasis ours)

And:

TAWHEED:

Definition and Categories:

Islam believes in ‘Tawheed’ which is not merely monotheism i.e. belief in one God, but much more. Tawheed literally means ‘unification’ i.e. ‘asserting oneness’ and is derived from the Arabic verb ‘Wahhada’ which means TO UNITE, UNIFY or CONSOLIDATE. (Source; the bold, underlined, capital emphasis is ours)

ஆக, இந்த 112வது அத்தியாயத்தில் அல்லாஹ்வின் தனித்தன்மையை விவரிக்க பயன்படுத்திய அஹத் என்ற வார்த்தையும் மற்றும் அல்லாஹ்வின் ஒற்றுமையைக் குறிக்க முஸ்லிம்கள் பொதுவாகப் பயன்படுத்தும் தவ்ஹீத் என்ற வார்த்தையும், "ஏகத்துவத்தை குறிப்பதில்லை", பலவற்றை ஒற்றுமைப்படுத்த ஐக்கியப்படுத்த பயன்படும் வார்த்தையாக அது உள்ளது.

குர்‍ஆனின் 112வது ஸூராவிற்கு 'தவ்ஹீத்' என்ற பெயரை முஸ்லிம்கள் சூட்டினார்கள். ஆனால், இந்த வார்த்தை அரபி மூலத்தில் அதாவது குர்‍ஆனில் எங்கும் இல்லை. இந்த பெயரை சூட்டியவர்களின் நோக்கத்திற்கு வெளியே இந்த பெயர் அமைந்துள்ளது, அதாவது அல்லாஹ்வின் இயல்புக்கு எதிராக தவ்ஹீத் என்ற வார்த்தை அமைந்துள்ளது.

எது எப்படியிருந்தாலும், முஸ்லிம்கள் குழப்பத்தில் உள்ளனர் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது. ஸூரா 112:1ன் படி அஹத் என்றால், அல்லாஹ் பலபேர்களில் ஒருவராக இருக்கிறார் என்று பொருள். ஆனால், அந்த பலபேர் எந்த வகையைச் சார்ந்தவர்கள்? என்ற கேள்வி எழுகிறது. அதாவது பல தெய்வங்களில் ஒருவர் அல்லாஹ்வா? இதனை நாம் ஏற்றுக்கொண்டால், இது குர்‍ஆனில் உள்ள வேறு பல வசனங்களோடு மோதுகின்றது, அதாவது அல்லாஹ்வைத் தவிர வேறு தெய்வங்கள் இல்லை என்றுச் சொல்லக்கூடிய வசனங்களோடு இது சண்டையிடுகின்றதே! ஒருவேளை, பல தெய்வங்கள் இருக்கிறார்கள், அவர்களை ஒன்று சேர்க்கும்படியாக அல்லாஹ் இருக்கின்றான் என்று சொல்லலாமா? தௌஹித் என்றால் இது தானே பொருள், பலவற்றை ஒன்றாக மாற்றுதல் என்பது தான் தௌஹித். இதனை ஏற்றுக்கொண்டால், ஒன்றுக்கும் அதிகமான தெய்வங்கள் இருப்பதாக பொருள் வந்துவிடுமே! இது கூட குர்‍ஆனின் இதர வசனங்களுக்கு எதிராக பேசுகின்றதே!

இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இதே குற்றச்சாட்டை அன்று பலதெய்வ வழிப்பாட்டு மக்கள் முஹம்மது மீது சுமத்தினார்கள், அதாவது முஹம்மது பல தெய்வங்களை ஒரு தெய்வமாக மாற்றுகிறார் என்று அவர்கள் குற்றம் சாட்டினார்கள், பார்க்க குர்‍ஆன்: 38:5

38:5. “இவர் (எல்லாத்) தெய்வங்களையும் ஒரே நாயனாக ஆக்கிவிட்டாரா? நிச்சயமாக இது ஓர் ஆச்சரியமான விஷயமே! (என்றும் கூறினர்).(முஹம்மது ஜான் தமிழாக்கம்)

38:5. என்ன, இவர் அத்தனை கடவுளருக்கும் பகரமாக ஒரே கடவுள்தான் என்று ஆக்கிவிட்டாரா? இது மிகவும் வியப்புக்குரிய விஷயம்தான்!” (IFT – தமிழாக்கம்)

38:5. கடவுள்களை ஒரே கடவுளாக ஆக்கி விட்டாரா? இது வியப்பான செய்தி தான்.'(பிஜே தமிழாக்கம்)

"Say: He is Allah, one of many who have always existed as God."

அல்லது

ஒரே கடவுளாக எப்போதும் ஒன்றாக இருந்த பல தெய்வங்களில் இவரும் ஒருவரா

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பல தெய்வங்கள் ஒன்றாக சேருவது ஒற்றுமையல்ல, உண்மையாக தெய்வங்களாக இருந்தவர்கள் ஒன்றாக சேருவது தான் ஒற்றுமையாக இருக்கமுடியும்.  இதனை தெளிவாக்க கீழ்கண்டவற்றை படிக்கவேண்டும்:

“கூறுவீராக: அவன் அல்லாஹ், எப்போதும் இருக்கின்ற பல தெய்வங்களில் இவரும் ஒருவராவார்”.

இதைத் தான் ஸுரா 112வது அத்தியாயம் கூறுகிறது. இப்போது இந்த முழூ அத்தியாயத்தையும் இங்கு மேற்கோள் காட்டுகிறோம். அதோடு கூட, அந்த அஹத் என்ற வார்த்தையின் உண்மையான பொருளோடு சேர்த்து தருகிறோம்.

112:1. (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் (அஹதுன் - மற்ற தெய்வங்களைப் போல அவனும்) ஒருவனே.

112:2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.

112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.

112:4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் (அவனைப்போன்று பன்முகத்தன்மையாக, பல தெய்வங்களில் ஒருவனாக‌, வேறு ஒருவரும்) இல்லை.

மேற்கண்ட ஸூராவில் நம்முடைய மொழியாக்கத்தை/விளக்கத்தை கொடுத்துள்ளோம். அந்த விளக்கம் அஹத் என்ற வார்த்தையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நாம் எழுதவில்லை. குர்‍ஆனின் அனேக வசனங்களின் அடிப்படையில் அதனை நாம் கொடுத்துள்ளோம். அதாவது அஹத் என்ற வார்த்தை குர்‍ஆனில் பயன்படுத்தப்பட்ட இடங்களில் "ஒன்றுக்கும் மேற்பட்ட தெய்வங்கள், மனிதர்கள் இருக்கும் ஒரு குழுவிலிருந்து ஒரு தெய்வத்தை அல்லது மனிதனை" குறிக்க அஹத் வார்த்தை குர்‍ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு: அல்லாஹ்வின் ஆவி/ஆத்துமா கூட இறைவன் தான் என்று குர்‍ஆன் சொல்கிறது.  இந்த ஆத்துமாவிற்கு ஒரு ஆள்தத்துவமும், இறைவனுக்கு இருக்கும் அனைத்து இயல்புகளும் உள்ளது என்று குர்‍ஆன் சொல்கிறது.  இதைப் பற்றிய மேலதிக விவரங்களுக்காக கீழ்கண்ட ஆங்கில கட்டுரையை படிக்கவும்:

  1. www.answering-islam.org/Shamoun/gabriel.htm
  2. www.answering-islam.org/Responses/Saifullah/t5_73.htm
  3. www.answering-islam.org/Responses/Osama/spirit1.htm
  4. www.answering-islam.org/Responses/Osama/spirit2.htm

குர்‍ஆன், தான் சொல்ல வந்த செய்தியை, எல்லா இடங்களிலும் ஒரே விதமாக சொல்லவில்லை என்பதை இந்த கட்டுரையில் எடுத்துக்காட்டினோம். ஒளிவு மறைவு இன்றி, விருப்பு வெறுப்பு இன்றி, குர்‍ஆனின் வசனங்களை அவைகள் சொல்லும் பொருளில் பார்க்கும் போது, "குர்‍ஆன் குழப்புகிறது" என்பதை மட்டும் புரிந்துக்கொள்ள முடிகின்றது.

இறைவனின் இயல்பு பற்றி இவ்விதமாக குழப்பமான செய்தியைத் தரும் புத்தகம் எப்படி ஒரு இறைவேதமாக இருக்கும்.

மேலதிக விவரங்கள்:

அஹத் என்ற வார்த்தை பல வடிவங்களில் குர்‍ஆனில் 74 இடங்களில் வருகிறது, அவைகள் அனைத்தையும் கீழ்கண்ட பட்டியலில் தருகிறோம்.

இந்த பட்டியலை குர்‍ஆன் கார்பஸ் என்ற தளத்திலிருந்து எடுத்துள்ளோம், அதன் தொடுப்பு: corpus.quran.com/qurandictionary.jsp)

 மூலம்: www.answering-islam.org/tamil/authors/sam-shamoun/allah_ahad_q112.html

கேள்வி 506: குர்‍ஆனில் முஹம்மதுவின் மருமகன் அலி அவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது என்று சில முஸ்லிம் அறிஞர்கள் கூறுகிறார்களே, இது உண்மையா?

பதில் 506:  இந்த  விவரம் பற்றி முஸ்லிம்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. சில முஸ்லிம் அறிஞர்களின் கருத்துப்படி, " அலி அவர்களின் பெயர்" குர்‍ஆனில் வருகிறது, ஆனால் வேறு சிலர் இந்த கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை.

இதைப் பற்றிய ஒரு சில விவரங்களை இப்போது சுருக்கமாக பார்ப்போம்.

அலி என்ற பெயர் குர்‍ஆனில் உள்ளது:

ஜாஃபர் இப்னு அல் ஹய்தம் என்ற இஸ்லாமிய அறிஞர் எழுதிய "கிதாப் அல் முனாஜராத்" என்ற புத்தகத்தில், கீழ்கண்ட  மூன்று வசனங்களில் "அலி" அவர்களின் பெயர் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்[1]. 

  1. குர்‍ஆன் 43:4 - In the (mother of the Book which is with Us, he is Ali, full of wisdom; (‘aliyyun)
  2. குர்‍ஆன் 19:50 - We appointed for them Ali as a voice of truth; (ʿaliyyan)
  3. குர்‍ஆன் 15:41 - and This is the straight path of Ali (ʿalayya

இந்த மூன்று வசனங்களில் வரும் வார்த்தைகளாகிய  "அலிய்யுன்", "அலிய்யன்", "அலய்ய" என்பவைகள் "அலி அவர்களின்" பெயர் தான் என்று இந்த இஸ்லாமிய அறிஞர் கூறுகின்றார். ஆனால், இதர முஸ்லிம் அறிஞர்கள் இதனை ஏற்றுக்கொள்வதில்லை.

கேள்வி 507: குர்‍ஆனில் முஹம்மதுவின் மருமகன் அலி அவர்கள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன என்பது உண்மையா?

பதில் 507: பெரும்பான்மையான முஸ்லிம் அறிஞர்களின் படி அலி அவர்கள் பற்றிய குறிப்புக்கள் குர்‍ஆனில் உள்ளன.

1) முஹம்மதுவின் உயிருக்கு பதிலாக தன் உயிரை தியாகம் செய்தவர்: அலி

கீழ்கண்ட வசனத்தில் "தன்னையே தியாகம் செய்தவர்" என்று சொல்லப்படுவது அலியைத் தான் என்று முஸ்லிம் அறிஞர்கள் கூறுகின்றனர்.

குர்‍ஆன் 2:207. இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்; அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான்.

முஹம்மது மக்காவிலிருந்து மதினாவிற்கு உயிர் தப்பிச் சென்ற போது, அவரது வீட்டில், அவரது படுக்கையில் அவரைப்போன்று படுத்துயிருந்து, முஹம்மது தப்பிச் செல்ல உதவியது அலியாவார். முஹம்மதுவை கொல்வதற்காக மக்காவின் குறைஷிகள் வந்த போது, முஹம்மதுவிற்கு பதிலாக அங்கு படுத்திருந்தது அலி என்பதைக் கண்டார்கள். ஒருவேளை அவர்கள் அவசரப்பட்டு கொலை செய்திருந்தால் அன்று அலி மரித்தியிருந்திருக்கூடும். இந்த நிகழ்ச்சியை குறித்துத் தான் குர்‍ஆன் 2:207 இறக்கப்பட்டது என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.

2) முஹம்மதுவின் குடும்ப நபர்களில் ஒருவர் அலியாவார்:

ஒரு முறை முஹம்மதுவை சந்திக்க நஜ்ரன் நாட்டிலிருந்து கிறிஸ்தவர்கள் வந்தார்கள். அவர்களுக்கும் முஹம்மதுவிற்கும் சரியான விவாதம் நடந்தது. இயேசுவின் தெய்வீகத்தை மறுக்கும்படி முஹம்மது சொல்வதை அவர்கள் கேட்பதாகத் தெரியவில்லை. கடைசியாக, ஒருவரை ஒருவர் சாபமிடும் "முபாஹலா" என்ற சாபமிடும் நிகழ்ச்சியை நடத்துவோம் என்று அல்லாஹ் முஹம்மதுவிற்கு கு‍ர்‍ஆனின் முலம் கட்டளையிட்டான்.

3:61. (நபியே!) இதுபற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும் எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால்: “வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும்; எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும்; எங்களையும் உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு) ”பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்” என்று நாம் பிரார்த்திப்போம்!” என நீர் கூறும்.

இதன் படி, கீழ்கண்ட வசனம் இறக்கப்பட்டதாம். இந்த வசனத்தில் "எங்கள் புதல்வர்களையும், எங்கள் பெண்களையும், எங்களையும்" என்ற வார்த்தைகளில் வருபவர்கள், முஹம்மதுவின் குடும்பமும், அலியின் குடும்பமும், அலியுமாம். எனவே இந்த வசனத்திலும் அலி பற்றிய குறிப்பு வருகிறது. முபாஹலா என்ற சாபமிடும் நிகழ்ச்சி செய்வது சரியானதா என்பதற்கு அடுத்த கேள்வியை படிக்கவும்.

3) தொழும் போது கூட தம் விரலை நீட்டி மோதிரத்தை ஏழைக்கு கொடுத்த அலி:

சில ஷியா முஸ்லிம் அறிஞர்களின்படியும், இன்னும் தபரி, சுயுதி மற்றும் ராஜி போன்ற முஸ்லிம் அறிஞர்களின் விளக்கங்களின் படி, ஒரு முறை அலி அவர்கள் தொழுகையில் இருந்தார், அந்த நேரத்தில் ஒரு பிச்சைக்காரன் வந்து எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டபோது, அலி அவர்கள் தம் விரலை நீட்டினாராம், உடனே அந்த பிச்சைக்காரன், அவரது விரலிலிருந்த மோதிரத்தை எடுத்துக்கொண்டானாம். இதனை முஹம்மதுவும் கவனித்தாராம், இந்த செயலை குறிப்பிடும்படி தான் கீழ்கண்ட குர்‍ஆன் வசனம் இறங்கியதாம்.

5:55. நிச்சயமாக உங்களுக்கு உற்ற நண்பர்கள்: அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்; எவர் ஈமான் கொண்டு, தொழுகையை கடைபிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலைசாய்த்தும் வருகிறார்களோ அவர்கள்தாம்.

இந்த வசனத்தில் "எவர் ஈமான் கொண்டு, தொழுகையை கடைபிடித்து, ஜகாத்தும் கொடுத்து, தலைசாய்த்தும் வருகிறார்களோ" என்று சொல்லப்படுவது அலியின் மேற்கண்ட நிகழ்ச்சியைத் தான் என்று முஸ்லிம்கள் கருதுகிறார்கள்.

4) முஹம்மது தம் கடைசி பிரசங்கத்திற்கு பிறகு அலியை தலைவராக நியமித்தார்:

ஷியா பிரிவு முஸ்லிம்களின் படி, முஹம்மது தம் மரணத்திற்கு முன்பு செய்த கடைசி பிரசங்கத்தில், தமக்கு அடுத்தபடியாக 'அலியை தலைவராக' நியமித்ததாக ஷியா முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.  தன் பிறகு இறக்கப்பட்ட குர்‍ஆன் வசனம் தான் 5:67 என்று ஷியாக்கள் கூறுகிறார்கள்.

5:67. தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்; (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராகமாட்டீர்; அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்; நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.

இப்படி இன்னும் சில குர்‍ஆன் வசனங்களில் அலி அவர்கள் பற்றிய குறிப்பு வருகிறது முஸ்லிம் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

அடிக்குறிப்பு:

[1] en.wikipedia.org/wiki/Ali_in_the_Quran

கேள்வி 508: குர்‍ஆன் சொல்லும் முபாஹலா என்ற சாபமிடும் நிகழ்ச்சி சரியானதா?

பதில் 508:  இந்த முபாஹலா என்ற சாபமிடும் இஸ்லாமிய  கோட்பாட்டைப் பற்றி “முபாஹலா என்பது ஹராமா? ஹலாலா? என்ற தலைப்பில்”  ஒரு கட்டுரையை நான் இதற்கு முன்பு எழுதியிருந்தேன், அதனை இங்கு தருகிறேன்.

இயேசுவின் ஹலால் முஹம்மதுவின் ஹராம் 8: முபாஹலா என்ற ஹராம்

ஆசீர்வாதம் மற்றும் சாபம் இவ்விரண்டும் எதிர் துருவங்கள்.

“ஒருவர் நன்றாக இருக்கவேண்டும்” என்று இறைவனிடம் வேண்டிக்கொள்வதும், அல்லது நேரடியாக ஒரு நபரிடம் “நீங்கள் நன்றாக இருக்கவேண்டும்” என்று சொல்வதும் ஒரு நல்ல செயல் ஆகும். “ஒருவர் அழிந்துவிடவேண்டும்” என்று இறைவனிடம் வேண்டிக்கொள்வதும், அல்லது ஒருவரைப் பார்த்து 'நீ நல்லா இருக்கமாட்டாய்' என்றுச் சொல்வதும்  ஒரு  தீயச்செயல் ஆகும்.    இதனை நாம் அனைவரும் அறிவோம் (மற்றவர்களை ஆசீர்வதிக்க நினைத்து, செய்ய முயன்று சிலவேளைகளில் தோற்றுவிட்டாலும், ஆசீர்வதிப்பது நல்ல செயல் என்பதை நாம் அறிவோம்.)

இயேசுவின் படி சபிப்பது ஒரு ஹராமான செயல்: 

இயேசு போதனை செய்யும் போது, கீழ்கண்டவிதமாக போதித்தார்.

உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள் (லூக்கா 6:28 )

நமக்கு நன்மை செய்பவர்களை மட்டும் ஆசீர்வதிப்பதல்ல, நம்மை சபிப்பவர்களையும் ஆசீர்வதிக்கவேண்டும் என்று இயேசு  கட்டளையிடுகிறார்.

இயேசு சொன்னதையே புதிய ஏற்பாட்டின் இதர புத்தகங்களிலும் காணமுடியும்.

உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள், ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றி சபியாதிருங்கள். (ரோமர் 12:14 )

நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது. அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம். துதித்தலும் சபித்தலும் ஒரேவாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது. (யாக்கோபு 3:8-10)

மேற்கண்ட யாக்கோபு புத்தகத்தில், ஏன் நாம் மற்றவர்களை சபிக்கக்கூடாது என்ற காரணத்தை சரியாக புரிந்துக்கொள்ள ஒரு லாஜிக் சொல்லப்பட்டுள்ளது. அதாவது ஒரு பக்தியுள்ள மனிதன் தான் வாயால் பல முறை தன் இறைவனின் துதியைச் சொல்லிவருவான். அதாவது, உலகையும், மனிதர்களையும் படைத்த இறைவனை தன் வாயினால் துதிப்பான். அதே வாயினால், அதே இறைவன் படைத்த மனிதனை சபிப்பது சரியான செயலாக இருக்குமா? என்ற கேள்வியை மேற்கண்ட வசனம் முன்வைக்கிறது. இதில் சிந்திக்கவேண்டிய இன்னொரு விஷயம் எதுவென்றால், நாம் சபிக்கும் மனிதன் தன்னை படைத்த இறைவனின் சாயலில் இருப்பது தான்.

எனவே, இயேசுவின் படியும் அவருடைய சீடர்களின் படியும்  சபிப்பது ஒரு தீய செயலாகும் அது கிறிஸ்தவத்தில் அனுமதிக்கப்படாத (ஹராம்) செயலாகும்.

['மற்றவர்களை சபித்துக்கொண்டு இருக்கும் கிறிஸ்தவர்களை' நம்மில் யாராவது பார்த்தால், இதனை நன்றாக புரிந்துக்கொள்ளுங்கள், அதாவது 'சபிக்கின்ற அந்த கிறிஸ்தவர்கள் இயேசுவை அறியவில்லை' என்று அர்த்தம்.  அவர்களுக்கு இயேசுவும் தெரியாது, இயேசுவிற்கு அவர்களையும் தெரியாது. 'இவர்களை நான் அறியேன்' என்று இயேசு சொல்லிவிடுவார்.]

முஹம்மதுவின் படி சபித்தல் ஹலால் செயலாகும்:

இஸ்லாமிய நபியாகிய முஹம்மதுவின் படியும், குர்‍ஆனின் படியும், மற்றவர்கள் மீது சாபம் கூறுவது, அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று பிரார்த்தனை செய்வது என்பது ஒரு ஹலால் செயலாகும். அதாவது இஸ்லாமில் அனுமதிக்கப்பட்ட செயலாக “மற்றவர்களை சபித்தல்“ உள்ளது.

முபாஹலா என்ற சாப பிரார்த்தனை:

அல்லாஹ் முஹம்மதுவிற்கு முபாஹலா செய்ய கட்டளையிடுகின்றான். பார்க்க குர்‍ஆன் 3:61

3:61. (நபியே!) இதுபற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும் எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால்: “வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும்; எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும்; எங்களையும் உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு) ”பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்” என்று நாம் பிரார்த்திப்போம்!” என நீர் கூறும். (டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்)

3:61. (நபியே!) இதைப்பற்றி உங்களுக்கு உண்மையான விவரம் கிடைத்த பின்னரும், உங்களிடம் எவரும் தர்க்கித்தால் (அவர்களுக்கு) நீங்கள் கூறுங்கள்: "வாருங்கள் எங்களுடைய பிள்ளைகளையும், உங்களுடைய பிள்ளைகளையும், எங்களுடைய பெண்களையும், உங்களுடைய பெண்களையும், எங்களையும், உங்களையும் அழைத்து (ஒன்று சேர்த்து) வைத்துக்கொண்டு (ஒவ்வொருவரும் நாம் கூறுவதுதான் உண்மையென) சத்தியம் செய்து (இதற்கு மாறாகக் கூறும்) பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக! என பிரார்த்திப்போம்" (என்று கூறும்படி கட்டளையிட்டான். இவ்வாறு நபியவர்கள் அழைத்த சமயத்தில் ஒருவருமே இவ்வாறு சத்தியம் செய்ய முன்வரவில்லை.) (அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்)

முபாஹலாவிற்கு கிறிஸ்தவர்களை அழைத்த முஹம்மது:

முஹம்மது தம்முடைய  வாழ்நாளின் கடைசி மூன்று ஆண்டுகளில், மக்கா மதினாவைச் சுற்றியுள்ள  இதர நாடுகளின் அரசர்களுக்கு "இஸ்லாமை ஏற்கும் படி" மிரட்டல் கடிதம் எழுதியுள்ளார். இவரது இராணுவ பலத்தைக் கண்டு சிலர் இஸ்லாமை ஏற்றனர், ஏற்காதவர்களோடு இவர் சண்டையிட்டுள்ளார். ஒரு முறை நஜ்ரான் பகுதியிலுள்ள (இன்றைய யெமன் நாடு) கிறிஸ்தவர்களை இஸ்லாமை ஏற்கிறீர்களா? அல்லது இஸ்லாமுக்கு அடிபணிந்து ஜிஸ்யா வரி கட்டுகிறீர்களா? என்று முஹம்மது கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த நாட்டிலிருந்து சில பிரதிநிதிக‌ள் வந்து முஹம்மதுவிடம் பேசினார்கள். தன்னை தீர்க்கதரிசி என்றுச் சொல்கின்ற இவர் யார் என்று அறிந்துச் செல்ல வந்தார்கள். வந்தவர்களும் முஹம்மது தங்கள் நிலைப்பாடு பற்றி பேசியுள்ளார்கள். முஹம்மதுவை ஒரு நபியாக ஏற்க அவர்கள் தயாராக இல்லை. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் "இயேசு வெறும் நபி" என்று முஹம்மது கூறியுள்ளார், வந்த கிறிஸ்தவ பிரதிநிதிகள் அதனை அங்கீகரிக்க வில்லை, பெட்ரோல் ஊற்றாமலேயே விவாதம் சூடு பிடித்துள்ளது.  இந்த நேரத்தில் தான் முஹம்மது அவர்களை 'முபாஹலா' என்ற சாப பிரார்த்தனைக்கு அழைத்துள்ளார். மேற்கண்ட குர்‍ஆன் வசனம் இந்த நேரத்தில் தான் இறங்கியது என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.

நான் என் மனைவி, பிள்ளைகளோடு வருகிறேன், நீங்கள் உங்கள் மனைவி பிள்ளைகளோடு வாருங்கள், நாம் பொய் சொல்பவர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தை கூறுவோம் என்று முஹம்மது கூறியுள்ளார்.

இப்படி சபிப்பது  எங்கள் மார்க்கத்தில் (கிறிஸ்தவத்தில்) இல்லை என்றுச் சொல்லி, அவர்கள் மறுத்துள்ளனர்.  அதனால், இஸ்லாமின் ஆட்சியின் கீழ் நஜ்ரான் முஹம்மதுவிற்கு வரிகட்டுகின்றவர்களாக மாறினார்கள். சபிப்பதைக் காட்டிலும், வரிகட்டுவதே மேன்மை என்று அவர்கள் எண்ணினார்கள்.

[முஹம்மதுவின் இராணுபலம் அதிகமாக இருந்ததால், அன்று அநேக அரசுகள் இஸ்லாமுக்கு அடிபணிந்தது. முஹம்மது மரித்த பிறகு அனேக நாடுகள், இஸ்லாமை விட்டு வெளியேறின. முதல் கலிஃபாவாக இருந்த அபூ பக்கர் அவர்கள், தங்களுக்கு வரிகட்டாதவர்கள் மீது போர் தொடுத்தார் என்று இஸ்லாமிய சரித்திரம் இரத்தசாட்சி பகருகிறது.]

முடிவுரை:

முஹம்மதுவின் இந்த வழிகாட்டுதலின் படி தான் இன்று முஸ்லிம் குழுக்களிடையே முபாஹலா செய்யும் பழக்கம் வந்துள்ளது. முஸ்லிம்கள் முஹம்மது காட்டிய வழியில் நடந்து, தங்கள் நிலைப்பாட்டை உறுதிப்படுத்திக்கொள்ள, அல்லாஹ்வின் பெயரில் இன்னொரு முஸ்லிமின் மனைவி, பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளை சபிப்பிகிறார்கள்.

இயேசுவின் கட்டளையிட்டதின் பேரில், கிறிஸ்தவர்கள் மற்றவர்களை சபிக்க இடம் தருவதில்லை. சபிப்பது இயேசுவால் அனுமதிக்கப்படாதது, இன்னும் ஒரு படிமேலே சென்று, "தீமை செய்பவர்களையும் ஆசீர்வதிப்பதே, கிறிஸ்தவர்களின் அடையாளமாக உள்ளது".

அல்லாஹ்வும்  முஹம்மதும் கற்றுக்கொடுத்த முபாஹலா என்ற சாபம் இடும் நிகழ்ச்சிக்கு முஸ்லீம்கள் அனேக சப்பைக் காட்டு காரணங்களைச் சொல்லக்கூடும். ஆனால், இயேசு கற்றுக்கொடுத்த 'ஆசீர்வதியுங்கள், சபிக்காதிருங்கள்' என்ற பொன் மொழிகளுக்கு எதிராக யார் என்ன காரணங்களைக் கொண்டுவரமுடியும்?

எது எப்படியோ, முஹம்மதுவிற்கு எது ஹலாலாக இருந்ததோ, அது இயேசுவின் படி ஹராம் ஆகும். முஹம்மதுவிற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு வந்த இயேசு கொண்டு வந்த ஆசீர்வாதம் கொடுக்கும் சட்டத்தை, முஹம்மது தகர்த்துவிட்டார்.

என் கருத்தை நீ எதிர்க்கிறாய்! நான் சொல்வது தான் உண்மை! நீ சொல்வது பொய்! இதனை நீ மறுத்தால், உன் குடும்ப நபர்களை ஒரு அவையில் கொண்டு வா! நானும் என் குடும்பத்தை அழைத்துவருகிறேன், ஒருவர் மீது ஒருவர் சாபம் இட்டுக்கொள்வோம்! என்ற கலாச்சாரம் இஸ்லாமில் உள்ளது.

ஒருவரை சபிக்கும் இந்த செயல் சரியானது தான் என்றுச் சொல்லி, அனேக காரணங்களை நீ முன்வைக்கமுடியும், ஆனால், இறைவன் படைத்த மனிதனை அதே இறைவன் பெயரில் சபிக்க முற்படுகின்றாயே! இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

கிறிஸ்தவத்தில் இப்படிப்பட்ட கலாச்சார சீர்கேட்டு பழக்கங்கள் இல்லை என்பதற்காக, இயேசுவை துதிக்கிறேன்.

அடிக்குறிப்புக்கள்:

1) en.wikipedia.org/wiki/Event_of_Mubahala

மூலம்: www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2019ramalan/2019-ramalan-8.html

கேள்வி 509: சாலொமோன் அரசரை ஜின்களோடு சம்மந்தப்படுத்தி குர்‍ஆன் பேசுகின்றதா?

பதில் 509: சாலொமோன் சாத்தான்கள் அல்லது ஜின்களை வைத்து இருந்தார், அவைகள் அவருக்காக வேலை செய்தார்கள் மற்றும் அவர் அவர்களோடு ஐக்கியம் கொண்டு இருந்தார் என்று குர்-ஆன் கூறுகிறது:

இன்னும் ஸுலைமானுக்குக் கடுமையாக வீசும் காற்றையும் (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அது, அவருடைய ஏவலின் படி, நாம் எந்த பூமியை பாக்கியமுடையதாக்கினோமோ (அந்த பூமிக்கும் அவரை எடுத்துச்) சென்றது இவ்வாறு, ஒவ்வொரு பொருளையும் பற்றி நாம் அறிந்தோராகவே இருக்கின்றோம்.

இன்னும், ஷைத்தான்களிலிருந்தும் அவருக்காகக் (கடலில்) மூழ்கி வரக் கூடியவர்களை (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்; இது தவிர) மற்றி வேலைகளையும் (அந்த ஷைத்தான்கள்) செய்யும்; அன்றியும் நாமே அவற்றைக் கண்காணித்து வந்தோம். (குர்-ஆன் 21:81,82)

"பிரமுகர்களே! அவர்கள் என்னிடம் வழிபட்டவர்களாக வருமுன், உங்களில் யார் அவளுடைய அரியாசனத்தை என்னிடம் கொண்டுவருபவர்?" என்று (ஸுலைமான் அவர்களிடம்) கேட்டார். ஜின்களில் (பலம் பொருந்திய ஓர்) இஃப்ரீத் கூறிற்று: நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன்; நிச்சயமாக நான் அதற்கு சக்தியுள்ளவனாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருக்கிறேன்." (27:39)

இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர்: "உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்" என்று கூறினார்; (அவர் சொன்னவாறே) அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும்; "இது என்னுடைய இறைவனின் அருட் கொடையாகும் நான் நன்றியறிதலுடன் இருக்கின்றேனா, அல்லது மாறு செய்கிறேனா என்று (இறைவன்) என்னைச் சோதிப்பதற்காகவும்; எவன் ஒருவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகின்றானோ அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே (நன்மை)யாவும்; மேலும், எவன் (நன்றி மறந்து) மாறு செய்கிறானோ (அது அவனுக்கே இழப்பாகும்; ஏனெனில்) என் இறைவன், (எவரிடத்தும்) தேவைப் படாதவனாகவும், மிகவும் கண்ணியம் மிக்கவனாகவும் இருக்கின்றான்" என்று (ஸுலைமான்) கூறினார். (குர்-ஆன் 27:39,40)

மேலும், கடைசியாக இந்த விவரம் பற்றிய குர்-ஆனின் வசனம் :

(அவருக்குப் பின்னர்) ஸுலைமானுக்குக் காற்றை (வசப்படுத்திக் கொடுத்தோம்), அதனுடைய காலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப் போல் உருகியோடச் செய்தோம்; தம் இறைவனுடைய அனுமதிப்படி அவருக்கு முன் உழைப்பவற்றில் ஜின்களிலிருந்தும் (வசப்படுத்திக் கொடுத்தோம்.) அவர்களில் எவர் (அவருக்கு ஊழியம்செய்வதில்) நம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றாரோ, அவரைக் கொழுந்து விட்டெரியும் (நரக) வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்று எச்சரித்தோம்). (34:12)

அவை ஸுலைமான் விரும்பிய, மிஹ்ராபுகளையும், சிற்பங்களையும், (தடாகங்கள் போன்ற) பெருங் கொப்பரைகளையும், நகர்த்த முடியா பெரும் பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன. "தாவூதின் சந்ததியினரே! நன்றி செய்யுங்கள். மேலும் என் அடியார்களில் நின்றும் நன்றி செலுத்துவோர் சொற்பமானவர்களே" (என்று கூறினோம்). (34:13)

அவர் (ஸுலைமான்) மீது நாம் மரணத்தை விதித்த போது அவர் இறந்து விட்டார் என்பதை, அவர் (சாய்ந்திருந்த) தடியை அரித்து விட்ட நிலத்தின் பூச்சி (கரையானைத்) தவிர வேறெதுவும் அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை அவர் கீழே விழவே "தாங்கள் மறைவான விஷயங்களை அறிந்திருக்கக் கூடுமானால் (கடின உழைப்பாகிய) இழிவுதரும் வேதனையில் தாங்கள் தரி பட்டிந்திருக்க வேண்டியதில்லை" என்று ஜின்களுக்கு தெளிவாக தெரிந்தது. (34:14)

இறைவனின் உண்மையான வார்த்தையாகிய பைபிள் தேவனுடைய ஆலயத்தை கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தது, ஷைத்தான்களோ, இதர பிசாசுக்களோ அல்ல அவர்கள் மனிதர்கள் என்றும், அவர்களை மேற்பார்வையிட்டது சாலொமோன் என்றும் கூறுகிறது (பார்க்க 1 இராஜாக்கள் 3-8, 1 நாளாகமம் 22, 28-29, 2 நாளாகமம் 2-7ம் அதிகாரங்கள்)

மேலும், மேற்கண்ட குர்-ஆன் வசனம் சாலொமோன் ஷைத்தான்களோடு ஐக்கியம் கொண்டு அவர்களிடம் வேலை செய்வித்தார் என்றுச் சொல்லி அவதூறு உண்டாக்கியது மட்டுமல்லாமல், இறைவனுடைய பரிசுத்த இலக்கணத்திற்கும் அவதூறு விளைவித்துள்ளது. அதாவது இறைவனது பரிசுத்த ஆலயத்தை ஷைத்தான்களும், பிசாசுக்களும் கட்டினார்கள் என்றுச் சொல்லி கேவலப்படுத்தியுள்ளது.

சில மனிதர்கள் சாலொமோன் பற்றி ஷாத்தான்கள் சொன்ன அவதூறுகளை நம்பி அவைகளை பின்பற்றியதாக குர்-ஆன் கூறுகிறது.

அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்;. ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர். ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள். அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாருத், மாருத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும்; "நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம்; (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்" என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை, அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது. தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? (குர்-ஆன் 2:106)

தாவீதின் குமாரனாகிய சாலொமோனுக்கு குர்-ஆன் அவதூறை உண்டாக்கியுள்ளது. அதாவது ஆலய கட்டுமானப் பணியில் அவர் சாத்தான்களோடு இணைந்து செயல்பட்டார். நிச்சயமாக இந்த கதைகள் எல்லாம் அதே ஷைத்தான்கள் மூலமாகத் தான் வந்திருக்கும். முஹம்மது கொண்டு வந்த செய்தியில் இப்படிப்பட்ட பொய்யான கதைகளை ஷைத்தான் தான் சேர்த்து இருக்கவேண்டும்.

(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும், நபியும், (ஓதவோ, நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த நாட்டத்தில் ஷைத்தான் குழப்பத்தை எறியாதிருந்ததில்லை எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கியப் பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான் மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.(குர்-ஆன் 22:52)

மேற்கண்ட வசனத்தின் படி, நபிமார்களின் வெளிப்பாடுகளில் சாத்தான் புகுந்து, அதனை மாற்றிவிடுகிறானாம், அதாவது அல்லாஹ்வின் வார்த்தைகளை மாற்றிவிடுகின்றானாம். இது போல முஹம்மதுவிற்கும் நடந்துள்ளது, அதற்கு முன்பும் நடந்துள்ளது என்று குர்‍ஆன் சொல்கிறது.

கேள்வி 510: எந்த‌ பழைய ஏற்பாட்டு நபரின் சரித்திரத்தை குர்‍ஆன் தொடர்ந்து விவரிக்கின்றது?

பதில் 510: பைபிளின் பல நிகழ்ச்சிகளை குர்‍ஆன் மறுபதிவு செய்துள்ளது. குர்‍ஆனில்  இருக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், "எந்த விவரத்தையும் கோர்வையாகச் சொல்லாது", அதாவது பைபிளில் வருவது போன்று, ஒரு நபரின் வரலாறை ஆரம்பத்திலிருந்து முடிவுவரை தொடர்ந்து கோர்வையாகச் சொல்லாது. குர்‍ஆனில் ஆங்காங்கே சில விவரங்கள் சொல்லப்பட்டு இருக்கும்.

ஆனால், யோசேப்பு என்ற பழைய ஏற்பாட்டு நபரின் வரவாறை ஒரே அத்தியாயத்தில் முழுவதுமாக குர்‍ஆன் சொல்லியிருக்கிறது.

அத்தியாயம் 12, அத்தியாயத்தின் பெயர்: யூஸுஃப்

மொத்த வசனங்கள் 111, இதில் 3ம் வசனம் தொடங்கி 101ம் வசனம் வரை குர்‍ஆன் யோசேப்பின் வரலாறை கூறியுள்ளது. ஆதியாகமத்தில் சொல்லப்பட்டது போன்று யோசேப்பின் வரலாறை சுருக்கமாகவும் கோர்வையாகவும் இந்த அத்தியாயத்தில் படிக்கமுடியும்.

குர்‍ஆனில் வரும் யோசேப்பின் நிகழ்ச்சிகளின் சுருக்கம்:

  1. யோசேப்பின் கனவு: 12:4-6
  2. சகோதரர்களின் வெறுப்புணர்வு: 12:8-9
  3. திட்டம்: 12:10
  4. தந்திரம்: 12:11-14
  5. யோசேப்பை ஆறுதல் படுத்தும் அல்லாஹ்: 12:15
  6. சகோதரர்கள் யோசேப்பின் உடைகளை தங்கள் தகப்பனிடம் கொண்டுச் செல்கிறார்கள்: 12:16-18
  7. பயணிகள் யோசேப்பை கண்டுபிடிக்கிறார்கள்: 12:19
  8. யோசேப்பு விற்கப்படுகிறார்: 12:20
  9. போத்திபாரின் வீட்டில் யோசேப்பு: 12:21-22
  10. போத்திபாரின் மனைவி யோசேப்பை பாவம் செய்ய தூண்டுகிறாள்: 12:23-24
  11. நேர்மையான யோசேப்பு: 12:25
  12. யோசேப்பின் நேர்மைக்கான ஆதாரம்: 12:26-27
  13. யோசேப்பை நியாயப்படுத்தும் போத்திபார்: 12:28-29
  14. போத்திபாரின் மனைவியை பரிகாசம் செய்யும் பெண்கள்: 12:30
  15. போத்திபாரின் மனைவி கொடுத்த  பதிலும் பயமுறுத்தலும்: 12:31-32
  16. யோசேப்பு அல்லாஹ்விடம் வலிமையைக் கேட்கிறார்: 12:33-34
  17. யோசேப்பு சிறைச்சாலைக்குச் செல்கிறார்: 12:35
  18. சிறைச்சாலையில் யோசேப்பு கனவுகளுக்கு பொருள் தருகிறார்: 12:36-41
  19. யோசேப்பின் விண்ணப்பம்: 12:42
  20. பார்வோனின் கனவு: 12:43
  21. ஞானவான்களினால் கனவின் பொருளை விளக்கமுடியவில்லை: 12:44
  22. யோசேப்பை நினைவு கூறும் உணவு பறிமாறுபவன்: 12:45
  23. இராஜாவின் கனவிற்கு விளக்கம் கொடுத்த யோசேப்பு: 12:46-49,  7:130
  24. இராஜா யோசேப்பை அழைத்துவரச் சொல்லுதல்: 12:50,54
  25. போத்திபார் வீட்டில் நடந்த நிகழ்வுகளை இராஜா யோசெப்பிடம் கேட்டல்: 12:50-53
  26. பார்வோனுக்கு முன்பு நின்ற யோசேப்பு: 12:54-56
  27. யோசெப்பின் சகோதரர்கள் அவரிடம் வந்து அவரை இன்னாரென்று அறியாமல் இருத்தல்: 12:58
  28. யோசேப்பு தன் சகோதரனை காண விரும்புதல்: 12:59-60
  29. யோசேப்பின் சகோதரர்கள் ஒப்புக்கொள்ளுதல்: 12:61
  30. யோசேப்பு பணப்பையை மறுபடியும் அவர்களின் பைகளில் வைக்கிறார்: 12:62
  31. யோசேப்பின் சகோதரர்கள் பென்பமீனை அனுப்பும் படி தங்கள் தந்தையிடம் வேண்டிக்கொள்ளுதல்: 12:63-64
  32. சகோதரர்கள் பணத்தை தங்கள் பைகளில் காணுதல்: 12:65
  33. சகோதரர்கள் பென்பமீனுக்காக வாக்குறுதி கொடுத்தல்: 12:66
  34. யோசேப்பின் தகப்பன் சில கட்டளைகளை கொடுத்தல்: 12:67
  35. யோசேப்புடன் சகோதரர்கள் ஒன்று சேர்தல்: 12:68-69
  36. யோசேப்பின் குவளை என்னவாகிறது: 12:70-77
  37. பென்யமீனுக்காக சகோதரர்கள் பரிந்து பேசுதல்: 12:78-79
  38. சகோதரர்கள் ஒன்று சேர்ந்து ஆலோசித்தல்: 12:80-83
  39. யாக்கோபு அழுகிறார்: 12:84-87
  40. யோசேப்பிடம் சகோதரர்கள் திரும்பி வருதல்: 12:88
  41. யோசேப்பு தம்மைப் வெளிப்படுத்தல்: 12:89-93
  42. யோசேப்பு பற்றி யாக்கோபு கேள்விப்படுதல்: 12:94-97
  43. சகோதரர்கள் தங்கள் தந்தையின் மன்னிப்பை கேட்டல்: 12:98-99
  44. யோசெப்பு தன் பெற்றோர்களை கனப்படுத்துதல், மற்றும் அல்லாஹ்விற்கு நன்றிச் சொல்லுதல்: 12:100-101

அடுத்த தொடரிலும் மேலதிக கேள்விகளுக்கு பதில்களைக் காண்போம்.

தேதி: 29th Jan 2021


சின்னஞ்சிறு 1000 கேள்வி பதில்கள் பொருளடக்கம்

உமரின் கட்டுரைகள் பக்கம்