மக்காவின் பிரச்சனை 2

வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?

முன்னுரை: “இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!” என்ற தொடரின் முந்தைய இரண்டு கட்டுரைகளை படிக்கவும்:

  1. மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
  2. மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?  

தற்போதைய கட்டுரையில், குர்-ஆன் கூறும் மக்கா ஏன் இன்றுள்ள சௌதி அரேபியாவில் உள்ள மக்கா இல்லை என்பதற்கு சரித்திர ஆசிரியர் கிப்சன் சொல்லும் இரண்டாவது ஆதாரத்தைக் காண்போம்.

மக்கா பிரச்சனை 2

புனித நகரம் மக்காவிலிருந்து பல வியாபார கூட்டங்கள் புறப்பட்டதாகவும், அதே போல, வியாபார கூட்டம் மக்காவிற்கு வந்ததாகவும் நாம் இஸ்லாமிய நூல்களில் வாசிக்கிறோம்.   முஹம்மதுவின் உறவினர் மற்றும் பாதுகாவலர் அபூ தலிஃப் ஒரு வியாபாரியாக இருந்தார் என்பதும், அவர் பல முறை வியாபார கூட்டங்களை மக்காவிலிருந்து அனுப்பினார் என்றும் நாம் வாசிக்கிறோம் (இப்னு இஷாக், பக்கம் 79). முஹம்மது திருமணம் செய்துக் கொண்ட கதிஜா அவர்களும் ஒரு வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருந்த செல்வ செழிப்பான ஒரு பெண்மணி தான். கதிஜா அவர்களின் வியாபாரத்தையும் முஹம்மது கவனித்து வந்துள்ளார், அதன் பிறகு தான் திருமணம் செய்துக் கொண்டார் (இப்னு இஷாக், பக்கம் 82).

மக்கா வறட்சியான இடம்:

மேலும், முஹம்மது மதினாவிற்கு இடம்பெயர்ந்த பிறகு, மதினாவை ஒட்டி மக்காவினரின் வியாபாரக் கூட்டம் செல்லும் போது, அவர்களை கொள்ளையிட முஹம்மது சென்றார், இந்த வியாபார கூட்டத்தில் ஒரு முறை மூன்று ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இருந்தார்கள் (தபரி, வால்யூம் 7, பக்கம் 110). இவைகளையெல்லாம் கவனித்தால், வியாபாரிகள் செல்லும் வழியில் மக்கா ஒரு நல்ல மைய இடமாக இருந்திருக்கிறது என்று நமக்கு தோன்றுகிறது, மேலும் முஸ்லிம்கள் இப்படியே நம்புகிறார்கள். ஆனால், சரித்திர ஆசிரியர்கள் வேறு விதமாக சொல்கிறார்கள். 

டாக்டர் பட்ரீஷியா க்ரோன் (Dr. Patricia Crone) என்ற சரித்திர ஆசிரியர் கீழ்கண்ட விதமாக கூறுகிறார் (இதனை கிப்சன் தம்முடைய புத்தகத்தில் பக்கம் 223ல் மேற்கோள் காட்டுகிறார்):

”மக்கா ஒரு வறண்ட மற்றும் வளமற்ற இடம் ஆகும், இப்படிப்பட்ட வறண்ட இடங்களில் வியாபாரிகள் தங்கி இளைப்பாறமாட்டார்கள். அதற்கு பதிலாக பக்கத்திலேயே நல்ல பச்சையான தாவரங்கள் இருக்கும் இடத்தில் தங்குவார்கள். வியாபார கூட்டம் வளம் நிறைந்த இடமாகிய தயிஃப் என்ற இடத்தில் தங்கி இளைப்பாராமல், ஏன் வளமற்ற இடமாகிய மக்காவில் தங்கி தங்களுக்கு துன்பத்தை வருவித்துக் கொள்வார்கள்?  மக்காவில் ஒரு கிணறு உள்ளது, மற்றும் காபா போன்ற வணக்கஸ்தலமும் உள்ளது, ஆனால், தயிஃப் என்ற இடத்திலும் இவ்விரண்டும் உள்ளது, அதே நேரத்தில் நல்ல உணவும் அங்கு கிடைக்கும். எனவே, வியாபார கூட்டம் மக்காவில் தங்குவதற்குச் செல்லமாட்டார்கள். (Crone, 1987 page 6-7; Crone-Cook, 1977, page 22)

“Mecca was a barren place, and barren places do not make natural halts, and least of all when they are found at a short distance from famously green environments. Why should caravans have made a steep descent to the barren lands of Mecca when they could have stopped at Tā’if? Mecca did, of course, have both a well and a sanctuary, but so did Tā’if, which had food supplies, too”. (Crone, 1987 page 6-7; Crone-Cook, 1977, page 22)

மேலும், ஆசிரியர் க்ரோன் இப்படி ஒரு கேள்வியை கேட்கிறார்:

“அரேபியாவில் அப்படி என்ன பொருட்கள் விளைகிறது, அவைகளை மிகத்தொலையில் உள்ள இடங்களுக்கு கொண்டுச் சென்று, விற்று இலாபம் சம்பாதிப்பதற்கு?  முக்கியமாக, தங்கள் நகரத்தை செழிப்பாக்குவதற்கு, இப்படிப்பட்ட வரட்சியான பிரதேசங்களின் வழியாகச் சென்று, பொருட்களை விற்று இலாபம் சம்பாதிக்கும் படி அரேபியாவில் எப்படிப்பட்ட பொருட்கள் விளைந்தன? (Crone, 1987, page 7)

Furthermore, Dr. Crone asks, “What commodity was available in Arabia that could be transported such a distance, through such an inhospitable environment,and still be sold at a profit large enough to support the growth of a city in a peripheral site bereft of natural resources?” (Crone, 1987, page 7) 

இஸ்லாமிய காலத்தின் அரபியர்கள் சாம்பிராணி, மற்றும் இதர வாசனை பலசரக்கு பொருட்களை (spices) கொண்டுச் சென்று வியாபாரம் செய்தார்கள் என்று முஸ்லிம்களும் இதர மேற்கத்திய அறிஞர்களும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், கிஸ்டர் மற்றும் ஸ்பெரென்ஜர் அவர்களின் ஆய்வின் படி, வாசனைப் பொருட்களை அரேபிய வியாபாரிகள் விற்பது பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நின்று விட்டது, மேலும் இஸ்லாமிய காலத்தில் அரபியர்கள் தோல் மற்றும் உடைகள் போன்ற பொருட்களையே வியாபாரம் செய்தார்கள். எனவே ஒரு நகரம் சர்வதேச அளவில் வியாபார மைய ஸ்தலமாக மாறுவதற்கு இப்பொருட்கள் (தோல் மற்றும் உடைகள்) போதுமானதாக இல்லை (Kister 1965, page 116; Sprenger, 1869, page 94).

இன்னொரு கடைசி மேற்கோளை கிப்சன் அவர்களின் புத்தகத்திலிருந்து பார்ப்போம்:

”இஸ்லாமிற்கு முந்தைய அரேபியா” என்ற தலைப்பில் பல மாநாடுகள் நடந்தன. பண்டைய கால அரேபியாவின் வரை படங்கள் (map of Arabia) பலவற்றை நான் ஆய்வு செய்தேன். அதன் பிறகு, நான் பேசும் மாநாட்டில் கலந்துக் கொண்டவர்களிடம் நான் ஒரு கேள்வியை கேட்டேன்: படைய கால அரேபிய வியாபாரிகள் செல்லும் வழிகள் எந்த இடத்தில் ஒன்றையொன்று சந்திக்கிறது?  இந்த இடம் தான் சர்வதேச வியாபாரிகள் சந்திக்கும் மையப்பகுதியாக இருக்கும். இந்த கேள்விக்கு,  மாநாட்டில் கலந்துக்கொண்ட ஆய்வாளர்கள் கொடுத்த பதில் “வியாபாரிகள் குழுமியிருக்கும் மைய இடம் அரேபியாவின் வடக்கு பகுதியில் உள்ளது, அரேபியாவின் தென் பகுதியில் உள்ள மக்காவில் அல்ல, இது மட்டுமல்ல, வியாபாரிகள் தங்கள் வழிகளில் தங்கி இளைப்பாறிச் செல்லும் இடமாக மக்கா இல்லை” 

In seminars on pre-Islamic Arabia, I have often traced the various trade routes on a map of Arabia. Then I ask the audience to indicate where all the trade routes intersect. This would naturally seem to be the “center of the trade route.” Inevitably, everyone responds that they intersect in northern Arabia, not at Mecca which was not even a stopping place on the caravan routes. Check the map on page 157 to see for yourself. (Quranic Geography, Page: 224, Chapter: CHAPTER SIXTEEN - MECCA & THE HOLY CITY) [1]

ஆசிரியர் தம்முடைய புத்தகத்தின் 157ம் பக்கத்தில் அரேபிய வியாபாரிகளின் வழிகளை வரைபடத்தில் குறித்துள்ளார்.  இந்த படத்தை அவருடைய அனுமதியின்றி நான் இங்கு பதிக்கமுடியாது, ஆனால், அவரது தளத்தில் அதே படம் பல வண்ணங்களில் பதித்துள்ளார். எனவே, அப்படத்தை கீழே உள்ள தொடுப்புகளை சொடுக்கி பார்க்கவும்:

மேற்கண்ட படத்தை நன்றாக கவனிக்கவும், இதில் மக்காவின் பெயர் வருகின்றதா என்று கவனியுங்கள்? இந்த தொடர் கட்டுரைகளில் நாம் பல இடங்களின் பெயர்களையும், அவ்விடங்களில் நடந்த இஸ்லாமிய நிகழ்ச்சிகளையும் பார்க்கப் போகிறோம். அவைகளை சரியாக புரிந்துக் கொள்ள இப்படத்தை நன்றாக மனதில் பதியவைத்துக் கொள்ளுங்கள். அதாவது: 

  • மதினாவிற்கு எப்பக்கத்தில் எருசலேம் இருக்கிறது (வடக்கு).
  • மதினாவிற்கு எப்பக்கத்தில் ஸனா இருக்கிறது (தெற்கு)
  • மதினாவிற்கு எப்பக்கத்தில் சிரியா இருக்கிறது?
  • எருசலேமுக்கு எப்பக்கத்தில் மதினா இருக்கிறது? எப்பக்கத்தில் சிரியா இருக்கிறது?

போன்ற விவரங்கள் நமக்கு உதவியாக இருக்கும். 

சிந்திக்கவேண்டிய விஷயங்கள் - இதுவரை கண்ட சுருக்கமும், மக்கா பற்றிய கேள்விகளும்:

1. குர்-ஆன், ஹதிஸ்கள் மற்றும் முஹம்மதுவின் வாழ்க்கை சரிதைகளை வாசிக்கும் போது, மக்கா ஒரு கிராமம் அல்ல, அது பல வியாபாரிகளைக் கொண்ட ஒரு நகரம் என்பதை அறிய முடிகின்றது. 

2. குர்-ஆன் மக்காவை ’நகரங்களின் தாய் (உம்முல் குரா)’ என்ற அடைமொழியில் அழைக்கிறது. 

3. முஹம்மதுவின் முதல் மனைவி கதிஜா அவர்கள், அதே மக்காவில் வியாபாரம் செய்துக் கொண்டு இருந்த செல்வ செழிப்பான பெண்மணியாக இருந்தார்கள். 

4. முஹம்மதுவும் வியாபார விஷயமாக பல முறை சிரியாவிற்கு சென்றும் இருக்கிறார். 

5. இவ்விவரங்கள் அனைத்தும் “மக்கா ஒரு முக்கியமான வியாபார நகரமாக இருந்ததாகவும், அவ்வூரில் செல்வ செழிப்பான வியாபாரிகள் இருந்ததாகவும் தெரிகின்றது”. 

6. இது மட்டுமல்ல, இதர நாட்டு வியாபாரிகள் பிரயாணமாகச் செல்லும் வழியில் தங்கி இளைப்பாறும் மையமாகவும் மக்கா இருந்ததாக தெரிகின்றது. 

7. ஆனால், மேற்கண்ட அனைத்து விவரங்களின் படி, நாம் தற்காலத்தில் சௌதியில் உள்ள இஸ்லாமிய புனித பூமி மக்காவை ஆய்வு செய்யும் போது, தொல்லியல், புவியியல், சரித்திர ஆதரங்கள் அனைத்தும், நமக்கு வேறு வகையான விவரங்களைத் தருகின்றது.

8. அக்கால அரேபிய வியாபாரிகள் செல்லும் வழியை வரைப்படத்தில் பார்க்கும் போது, மக்காவின் பெயர் காணப்படுவதில்லை.

9. வளமற்ற ஒரு இடமாகவும், வியாபாரிகள் தங்கி இளைப்பாறி தங்கள் ஒட்டகங்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவுக்கு பயன்படாத ஒரு இடமாகவும் மக்கா இருந்துள்ளதாக ஆய்வு சொல்கிறது. சரித்திர தொல்லியல் ஆய்வாளர்கள் இதனை உறுதி செய்திருக்கிறார்கள்.

10. இதன் மூலம்  தெளிவாக்கப்படும்  விவரம் என்னவென்றால், இஸ்லாமிய ஆதாரங்கள் குறிப்பிடம் இடம் “தற்காலத்தில் நாம் மக்கா என்று அழைக்கும் இடமல்ல, அது வேறு ஒரு இடமாக இருக்கிறது” என்பதைத் தான். 

முடிவுரை:

நாம் இதுவரை மக்கா பற்றி இரண்டு விஷயங்களை (பிரச்சனைகளை) பார்த்து இருக்கிறோம். 

1. ”நகரங்களின் தாய்” என்று குர்-ஆன் குறிப்பிடும் இடம் மக்கா அல்ல, அது வேறு ஒரு இடமாக  இருக்கவேண்டும், ஆய்வுகள் இப்படித்தான் சொல்கின்றன.

2. இஸ்லாமின் ஆரம்பகால நூல்கள் கொடுக்கும் வர்ணனைகள், வளமிக்க வியாபார நகரம் போன்றவை ‘மக்காவை’ குறிப்பதாக இல்லை, வியாபாரிகளுக்கும், வியாபாரத்திற்கும் பயன்படாத ஒரு  வறண்ட இடமாக மக்கா இருந்துள்ளது. அப்படியானால், இஸ்லாமிய நூல்கள் விவரிக்கும் அந்த வியாபார வசதி நிறைந்த இடம் மக்கா அல்லாமல் வேறு ஒரு நகரமாக இருந்திருக்க வேண்டும்.

மேற்கண்ட ஒவ்வொரு காரணமும், இஸ்லாமியர்கள் புனித பூமியாக கருதிக் கொண்டு இருக்கும் மக்காவை விட்டு, வேறு ஒரு இடத்திற்கு நேராக தன் விரலை நீட்டுகிறது என்பதை காணமுடியும். குர்-ஆன் சொல்லும் நகரங்களின் தாய் என்பது ’பெட்ராவை’ குறிக்கும் என்று சரித்திர ஆசிரியர் தம் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். குர்-ஆன் சொல்லும் வர்ணனைகள் பெட்ரா நகரத்திற்கு சரியாக பொருந்துகிறது. ’மக்காவின் பிரச்சனைகள்’ அனைத்தையும் பார்த்துவிட்ட பிறகு ’பெட்ரா’ சம்மந்தப்பட்ட விவரங்களுக்கு நாம் செல்வோம்.

நம்முடைய அடுத்த பாகத்தில், மக்காவின் மூன்றாவது பிரச்சனைப் பற்றிய விவரங்களைக் காண்போம்.

மக்காவின் பிரச்சனைகள் பற்றிய கட்டுரைகள் 

உமரின் இதர கட்டுரைகள்