உலக மகளிர் தினத்தை முஸ்லிம் பெண்கள் கொண்டாடமுடியுமா?

"இஸ்லாமில் ஒவ்வொரு நாளும் மகளிர் தினம் தான்" என்ற பெயரில் ஒரு ஆங்கில கட்டுரையைப் படித்தேன் [1]. புதிய விஷயம் ஏதாவது சொல்லப்பட்டு இருக்கும் என்று எதிர்ப்பார்த்து அதை ஆர்வத்துடன் படித்தேன்.  மகளிர் தினம் என்றுச் சொல்லி கொண்டாடுகிறார்கள் ஆனால், அப்பெண்களுக்கு உரிமைகளையும், மதிப்பையும் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டோடு அக்கட்டுரை தொடங்கப்பட்டு இருந்தது.

இஸ்லாமுக்கு முன்பு அரேபிய சமுதாயத்தில் பெண்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்று பட்டியலிடப்பட்டு இருந்தது. அதன் பிறகு இந்தியா, சைனா, (அக்கால) கிரேக்க, ரோம சாம்ராஜ்ஜியங்களில் மற்றும் யூத கிறிஸ்தவ சமுதாயங்களில் பெண்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்று மேலோட்டமாக சில வரிகள் எழுதப்பட்டு இருந்தது. அக்கட்டுரையை எழுதிய 'உம் மர்யம்' என்பவருக்கு சரித்திரமும், இதர மார்க்கங்களும் சரியாக தெரியாமல் இருந்திருக்கவேண்டும் என்பதை அந்த சில பத்திகளை படிக்கும் போது புரிந்துக்கொள்ளலாம். கடைசி இரண்டு பத்திகளில் இஸ்லாம் எப்படி பெண்களை உயர்த்திப்பிடித்துள்ளது என்பதை சொல்லியிருந்தார்.

அந்த இரண்டு பத்திகளில் சொல்லப்பட்டவைகள் உண்மையா? அல்லது பொய்யானவையா? என்பதை சுருக்கமாக காண்போம். மேலும், முஸ்லிம் பெண்களால் எப்போது மகளிர் தினம் கொண்டாடமுடியும்? என்பதை இக்கட்டுரையின் கடைசியில் எழுதியுள்ளேன்.

மேற்கோள்:

"In Islam every day is women’s day; women are considered gifts of Allah and are always cherished." 

பெண்கள் அல்லாஹ்வின் பரிசுகள் என்பது உண்மையானால், ஏன் இஸ்லாமிய பெண்கள் தங்கள் இஸ்லாமிய சமுதாயங்களில் அதிகமான கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள்?

முஹம்மதுவின் மனைவி ஆயிஷா அவர்கள் "'இறைத்தூதர் அவர்களே!) நான் (ஆயிஷா) இறைநம்பிக்கையுடைய பெண்கள் சந்திக்கும் துன்பத்தைப் போன்று எங்கும் பார்த்ததில்லை. இவருடைய மேனி (இவருடைய கணவர் அப்துர் ரஹ்மான் அடித்ததால் கன்றிப்போய்) இவரின் (பச்சை நிற முகத்திரைத்) துணியைவிடக் கடுமையான பச்சை நிறமுடையதாக உள்ளது'" என்று கூறியுள்ளார்கள். 

புகாரி 5825. இக்ரிமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். 

ரிஃபாஆ அல்குறழீ(ரலி) அவர்கள் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட, அந்தப் பெண்ணை அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர் அல்குறழீ(ரலி) அவர்கள் மணந்தார்கள். (பிறகு நடந்தவற்றை) ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: 

 (ஒரு முறை) அந்தப் பெண்மணி பச்சை நிற முகத்திரை அணிந்துகொண்டு என்னிடம் (வந்து தம் கணவர் அப்துர் ரஹ்மான் தம்மை துன்புறுத்துவதாக) முறையிட்டார். தம் கணவர் தம்மை அடித்ததால் தம் மேனியில் (கன்றியிருந்த) பச்சை நிற அடையாளத்தை எனக்குக் காட்டினார். 

-(இக்ரிமா கூறுகிறார்:) பெண்கள் ஒருவருக்கொருவர் உதவுவது வழக்கம் தானே?) அந்த வழக்கப்படி 

(நபி(ஸல்) அவர்கள் வந்தபோது, 'இறைத்தூதர் அவர்களே!) நான் (ஆயிஷா) இறைநம்பிக்கையுடைய பெண்கள் சந்திக்கும் துன்பத்தைப் போன்று எங்கும் பார்த்ததில்லை. இவருடைய மேனி (இவருடைய கணவர் அப்துர் ரஹ்மான் அடித்ததால் கன்றிப்போய்) இவரின் (பச்சை நிற முகத்திரைத்) துணியைவிடக் கடுமையான பச்சை நிறமுடையதாக உள்ளது' என்று சொன்னேன். (இதற்கிடையில்) அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர்(ரலி) அவர்கள் தம் மனைவி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று தம்மைப் பற்றி முறையிட்டார் என்று கேள்விப்பட்டார். எனவே, மற்றொரு மனைவியின் மூலமாகத் தமக்குப் பிறந்த இரண்டு மகன்களைத் தம்முடன் அழைத்து வந்தார். . . . 

இதுவா இஸ்லாமின் மகளிர் தின கொண்டாட்டம்? அல்லாஹ்வின் பரிசுகளாகிய பெண்களை முஸ்லிம்கள் நடத்தும் விதம் இது தானா? 

மேற்கோள்:

Islam gives woman the rights and status she deserves as it is the religion of nature people are born with.

பெண்களுக்கு தேவையான அல்லது அவர்களுக்கு சேரவேண்டிய உரிமைகளையும், அந்தஸ்தையும், மரியாதையும் இஸ்லாம் தருகிறது என்பது உண்மையானால்,உலக மக்கள், முஸ்லிம் பெண்கள் மீது பரிதாப்படும் அளவிற்கு அவர்களின் வாழ்க்கையுள்ளதே இதற்கு என்ன பதில்? முஸ்லிம்கள் சில மணித்துளிகளை ஒதுக்கி, முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை படித்து, அதன் பிறகு அவர்கள் அபிப்பிராயங்களை வைக்கட்டும்.

முஹம்மதுவின் காலத்திலேயேயும் பெண்களுக்கு என்ன மதிப்பு கொடுக்கப்பட்டு இருந்தது? எவ்விதமான உரிமைகள் கொடுக்கப்பட்டு இருந்தது?

ஆறு வயது சிறுமியை தனக்கு 50 வயது ஆகும் போது திருமணம் நிச்சயம் செய்துக்கொண்டார் முஹம்மது. ஒரு கிழவனுக்கு ஒரு சிறுமியை திருமணம் செய்ய அனுமதிக்கும் இஸ்லாமில் எங்கே பெண்களுக்கான உரிமையும், மரியாதையும் கிடைக்கும்? யாராவது சிறுமி ஆயிஷாவிடம் 'நீ திருமணம் செய்துக்கொள்கிறாயா?' என்று கேட்டார்களா? அப்படி கேட்டாலும் அவரால் தன்னுடைய ஆறு வயதில்  சரியான பதில் சொல்லியிருக்கமுடியுமா? அன்று இஸ்லாம் செய்த இப்படிப்பட்ட தீய செயல்களால் இன்று இஸ்லாமிய நாடுகளில் இலட்சக்கணக்கான சிறுமிகள் அவதிப்படுகிறார்கள். இதுவா மகளிர் தினம் கொண்டாடும் இலட்சணம்?

மேற்கோள்:

Islam has been programmed into our very being and a woman who follows it completely will be at peace with herself and the world. Islam treats women with dignity and honour. Islam treats women equally in all spheres of life: Equality in Basic Humanity, Religious Obligations, Rewards and Punishments, Ownership and Financial Transactions, Honour and Nobility, Education, Social Responsibilities. Women are given the best rights in terms of motherhood.

இது மிகப்பெரிய பொய். இந்த தொடுப்பில் கொடுக்கப்பட்ட கொடுமைகளை படித்துப் பார்க்கவும்  https://wikiislam.net/wiki/Wife_Beating_in_Islam

  • மனைவிகளை அடிக்க முஸ்லிம் ஆண்களுக்கு அனுமதி உண்டு.
  • மனைவியின் அனுமதியின்றி இரண்டாம், மூன்றாம் நான்காம் திருமணம் செய்ய ஆண்களுக்கு அனுமதி உண்டு.
  • சின்னச் சின்ன காரணங்களுக்காக மனைவிகளை விவாகரத்து செய்ய முஸ்லிம் ஆண்களுக்கு அனுமதி உண்டு.
  • முஹம்மதுவின் மனைவிகளை குர்‍ஆனின் வசனங்கள் கொண்டு 'தலாக்; மிரட்டல் விடுகின்றார் அல்லாஹ் (இக்கட்டுரையை படிக்கவும் -  தலாக் 3 – முஸ்லிம்களின் அன்னையர்களை மிரட்டிய (blackmail) அல்லாஹ்

இதுவா மகளிர் தினத்தை கொண்டாடும் விதம்?

மேற்கோள்:

The Qur’ān specifically denounces the killing of daughters and the Holy Prophet (peace and blessings of Allah be to him) has shown through his example how to treat daughters in the best possible manner.

கௌரவக்கொலை என்றப் பெயரில் எத்தனை ஆயிர முஸ்லிம் பெண்கள் ஒவ்வொரு ஆண்டும், இஸ்லாமிய நாடுகளில் கொலை செய்யப்படுகிறார்கள் என்பதை கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி படியுங்கள் (https://wikiislam.net/wiki/Muslim_Statistics_-_Honor_Violence). முஸ்லிம்கள், ஒரே பொய்யை ஏன் பல ஆயிர முறை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது ஒரு புரியாத புதிராக உள்ளது. 

பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் குர்-ஆனின் இரு வசனங்கள்:

குர்-ஆனில் இவ்விரு வசனங்கள் இருக்கும் வரை முஸ்லிம் பெண்களால் மகளிர் தினம் கொண்டா முடியாது.

1) குர்-ஆன் 4:34 – மனைவியை அடிக்க ஆண்களுக்கு அதிகாரம் உண்டு

(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்;. எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான். (முஹம்மது ஜான் தமிழாக்கம்).

மேற்கண்ட குர்-ஆன் வசனம் இருக்கும் வரை, முஸ்லிம் பெண்கள் எப்படி மகளிர் தினத்தை கொண்டாடமுடியும்? 

2) குர்-ஆன் 4:3 – நான்கு மனைவிகள் மற்றும் வைப்பாட்டிகள்

குர்-ஆன் 4:3

அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.

தன் கணவன் எந்த நேரத்தில் என்ன செய்வான் என்று தெரியாமல் ஒரு முஸ்லிம் பெண் துக்கப்பட்டுக்கொண்டு இருந்தால், எப்படி ஒவ்வொரு நாளும் சந்தோஷமாக வாழமுடியும்? எந்த நேரத்திலும் ஒரு முஸ்லிம் ஆண் ஒரு புதிய பெண்ணை வீட்டுக்கு கொண்டுவந்து ‘இவள் தான் உன் சக்களத்தி’ என்று அறிமுகம் செய்வானோ என்று பயத்துடம் பெண்கள் முஸ்லிம் நாடுகளில் வாழுகிறார்கள். மக்காவிலும், சௌதி அரேபியாவிலும் அதிக அளவில் விவாகரத்துக்கள் நடப்பதற்கு காரணம் ‘முஸ்லிம் ஆண்களின் பலதாரமணம்’ என்று தெரியவந்துள்ளது,  பார்க்க: தலாக் 10 – சௌதி அரேபியா மற்றும் மக்காவின் தலாக் புள்ளிவிவரங்கள் நம்மை பிரமிக்கச்செய்யாது ஏன்?

எந்த நாள் இவ்விரு வசனங்களையும் நாங்கள் பின்பற்றமாட்டோம் என்று முஸ்லிம் ஆண்கள் சொல்வார்களோ, அன்று தான் முஸ்லிம் பெண்கள் ‘மகளிர் தினம்’ கொண்டாடுவதற்கான அடித்தளம் அமைக்கப்படும். 

பெண்களுக்கு இஸ்லாம் உரிமைகள் தருகின்றது என்று சும்மா சொல்லிக்கொள்ளலாமே தவிர, முஸ்லிம்கள் நாடுகளில் வாழும் முஸ்லிம் பெண்களை கேட்டுப்பார்த்தால் தான் உண்மை புரியும்.

முஸ்லிம் பெண்கள் விவாகரத்து என்ற ஒரு விஷயத்தில் படும் துன்பங்களை/பிரச்சனைகளை அறிய கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்:

தலாக் 1 – நம் கலாச்சாரத்தில் நீதிமன்றம் தலையிடுவது ஏன்?

தலாக் 2 – தலாக்கிற்கான காரணங்களை குர்-ஆன் நிர்ணயித்துள்ளதா?

தலாக் 3 – முஸ்லிம்களின் அன்னையர்களை மிரட்டிய (blackmail) அல்லாஹ்

தலாக் 4 – இஸ்லாமிய அன்னையர்களுக்கு இரண்டாம் (தலாக்) மிரட்டல் விடுத்த அல்லாஹ்

தலாக் 5 – நபிவழி: மனைவிக்கு வயதாகிவிட்டால் விவாகரத்து செய்யலாம்

தலாக் 6 – நபிவழி: மாமனாருக்கு விருப்பமில்லையா! மருமகளை தலாக் கொடுத்துவிடு

தலாக் 7 – நபிவழி: பத்து மனைவிகளில் ஆறு மனைவிகளை விலக்கவேண்டும் – அவர்கள் யார்?

தலாக் 8 – ஏழ்மையைச் சொல்லி துக்கப்பட்ட மருமகளுக்கு தலாக் – இப்ராஹீம் நபி வழி

தலாக் 9 – எனக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர் – உனக்கு ஒருவரை கொடுத்துவிடுகிறேன்

தலாக் 10 – சௌதி அரேபியா மற்றும் மக்காவின் தலாக் புள்ளிவிவரங்கள் நம்மை பிரமிக்கச்செய்யாது ஏன்?

அடிக்குறிப்புக்கள்:

[1] http://www.radianceweekly.com/297/8421/how-us-provokes-afghans/2012-03-11/womens-rights/story-detail/in-islam-every-day-is-womens-day.html

தேதி: மார்ச் 8, 2017


உமரின் இதர தலைப்புக்கள் (General topics)

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்