குர்‍ஆன் 4:95 & 6:93 - மோசடிக்காரர்களிடமிருந்து (முஹம்மதுவிடமிருந்து) எச்சரிக்கையாக இருங்கள்!

ஒரு நாள் முஹம்மது "ஜிஹாது என்ற புனிதப்போரில் பங்கு பெற தவறியவர்கள் குறித்து" அல்லாஹ்விடமிருந்து ஒரு வெளிப்பாட்டை, வசனத்தைப் பெறுகிறார்.

“Not equal are those believers who sit (at home) and those who strive and fight in the Cause of Allah.”

குர்‍ஆன்  4:95. இறைநம்பிக்கையாளர்களில் எவர்கள் தக்க காரணம் எதுவுமின்றி ஜிஹாதில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் தங்கி விடுகின்றார்களோ அவர்களும், எவர்கள் தங்களுடைய உயிராலும் பொருளாலும், அல்லாஹ்வின் வழியில் ஜிஹாத் செய்கின்றார்களோ அவர்களும் சமமாக மாட்டார்கள். ஜிஹாதில் கலந்து கொள்ளாமல் தங்கிவிட்டவர்களை விட தங்களுடைய உயிராலும் பொருளாலும் ஜிஹாத் செய்பவர்களுக்கு அல்லாஹ் சிறப்பான அந்தஸ்தை வைத்திருக்கின்றான். ஒவ்வொருவருக்கும் நன்மையையே அல்லாஹ் வாக்களித்துள்ளான். எனினும் ஜிஹாதில் கலந்து கொள்ளாமல் தங்கிவிட்டவர்களைவிட கலந்து கொண்டவர்களின் கூலி அவனிடம் மிக அதிகமானதாக இருக்கிறது. (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்)

இவ்வசனத்தின் பொருள் என்னவென்றால்  "அல்லாஹ்விற்காக போரில் தீவிரமாக ஈடுபடுபவர்கள், போரில் ஈடுபடாமல் வீட்டில் உட்கார்ந்திருப்பவர்களை விட உயர்ந்தவர்கள்" என்பதாகும்.

இந்த தெய்வீகமான வசனத்தை முஹம்மதுவின் ஒரு எழுத்தாளர் எழுதிக்கொண்டு இருக்கும் போது, கண்பார்வையற்ற ஒரு முஸ்லிம் அங்கு வருகிறார். அவ்வசனத்தைப் பற்றி அறிந்தவுடன் அவர் முஹம்மதுவிடம் ஒரு கேள்வியை கேட்கிறார். அவர் குருடனாக இருக்கிறார் இதனால் "ஜிஹாத்தில் பங்கேற்க முடியாது". இவ்வசனத்தின் படி "அல்லாஹ்வின் வெளிப்பாட்டில் நியாயமில்லை" என்றுச் சொல்லி முஹம்மதுவிடம் கேள்வி கேட்டு வாதிடுகிறார். ஜிஹாதில் பங்கு பெறாமல், வேண்டுமென்று வீட்டில் உட்காரவில்லை, கண்பார்வை இல்லை என்பதால் தான் பங்கு பெறவில்லையென்று முஹம்மதுவிடம் கேள்வி கேட்கிறார்.

உடனே முஹம்மதுவிற்கு மாற்றப்பட்ட வசனம் இறங்குகிறது...

மேற்கண்ட ஸூரா 4:95ல், "தக்க காரணங்கள் இல்லாமல் (நோய் நோடிகள், ஊனம் போன்ற காரணங்கள் இல்லாமல்)" என்ற வார்த்தைகள் புதிதாக சேர்க்கப்பட்டு வெளிப்பாடு இறங்குகின்றது.  இப்படி "இரண்டாவது முறை" ஒரு குருடனின் கேள்வியால் மாற்றப்பட்டு இறக்கப்பட்ட வசனத்தைத் தான் இன்று நீங்கள் குர்‍ஆனில் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்.

இந்த அருமையான நிகழ்ச்சியை சஹீஹ் புகாரி நூலில் படிக்கலாம். 

சஹீஹ் புகாரி  2831. பரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘இறைநம்பிக்கையாளர்களில் (தக்க காரணமின்றி போருக்குச் செல்லாமல் வீட்டில்) தங்கிவிடுவோரும் இறைவழியில் தம் செல்வங்களாலும் உயிர்களாலும் அறப்போர் புரிவோரும் சமமாகமாட்டர்” (4:95) எனும் வசனம் அருளப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களை அழைத்தார்கள். அவர் அகலமான எலும்பு ஒன்றைக் கொண்டு வந்து, அந்த வசனத்தை எழுதினார். (அருகில் இருந்த கண்பார்வையற்ற) அப்துல்லாஹ் பின் உம்மி மக்த்தூம் (ரலி) அவர்கள் தமது (கண்பார்வையற்ற) குறை குறித்து முறையிட்டார்கள். அப்போது, “தக்க காரணமின்றி’ என்ற (வாசகம் சேர்ந்த) முழு வசனம் (4:95) அருளப்பட்டது.

சஹீஹ் புகாரி  2832. சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் மர்வான் பின் அல்ஹகமைப் பள்ளிவாசலில் அமர்ந்திருக்கக் கண்டேன். நான் அவரை நோக்கிச் சென்று அவருக்குப் பக்கத்தில் அமர்ந்துகொண்டேன். அப்போது அவர் எங்களுக்கு அறிவித்தார்: ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘இறை நம்பிக்கையாளர்களில் (தக்க காரணமின்றி போருக்குச் செல்லாமல் வீட்டில்) தங்கி விடுவோரும் இறைவழியில் தம் செல்வங் களாலும் உயிர்களாலும் அறப்போர் புரிவோரும் சமமாகமாட்டர்” (4:95) எனும் இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

அதை நபி (ஸல்) அவர்கள் எனக்கு ஓதிக்காட்டிக்கொண்டிருந்தபோது அவர்களிடம் அப்துல்லாஹ் பின் உம்மி மக்த் தூம் (ரலி) அவர்கள் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னால் அறப்போரில் கலந்து கொள்ள முடியுமென்றால் நான் அறப் போரில் பங்கெடுத்திருப்பேன்” என்று கூறினார்கள். அவர் கண்பார்வையற்ற மனிதராக இருந்தார். ஆகவே, அப்போது உயர்ந்தோனும் வளமிக்கோனுமான அல்லாஹ் தன் தூதருக்கு (வேத அறிவிப்பை) அருளினான்.

நபி (ஸல்) அவர்களின் தொடை அப்போது என் தொடையின் மீதிருந்தது. (வேத அறிவிப்பு வரத்தொடங்கிய காரணத் தால்) அது என்மீது (கனத்துப்போய்) கடுமையாக (அழுத்த) ஆரம்பித்தது. எந்த அளவுக்கென்றால் என் தொடை நசுங்கிவிடும் என்று அஞ்சினேன். பிறகு நபியவர்களைவிட்டு அந்நிலை அகற்றப்பட்டது. அப்போது அல்லாஹ், <தகுந்த காரணமின்றி (தங்கிவிட்டவர்கள்)> எனும் வாசகத்தை (மேற்கண்ட வசனத்துடன் சேர்த்து) அருளியிருந்தான்.

மேலும் பார்க்க எண்கள்: 4593, 4594 & 4990

ஊனமுற்றவர்களுக்கு ஒரு முக்கியமான விதிவிலக்கு அளிப்பதைப் பற்றி 'சர்வ ஞானியான, எல்லாம் அறிந்த அல்லாஹ்'  மறந்துவிட்டான் என்றுச் சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? நம்புகிறீர்களா?

அல்லாஹ்வின் வெளிப்பாட்டில் இருந்த தவறை சரி செய்ய, மேம்படுத்த மற்றும் அதனை திருத்த ஒரு குருட்டு மனிதன் உண்மையில் தேவைப்படுவானா?

குர்ஆன் நித்தியமானது என்றும், நித்திய பலகைகளில்(உம்முல் கிதாபில்) பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும் இஸ்லாம் போதிக்கின்றதே, அப்படியானால், இந்த வசனம் (4:95) எப்படி "உம்முல் கிதாபில்" எழுதப்பட்டுள்ளது? ஊனமுற்றவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்ட வசனமாகவா? அல்லது விதிவிலக்கு அளிக்கப்படாத வசனமாகவா?

ஞானத்தில் குறைவில்லாத மற்றும் எல்லையில்லா ஞானமுள்ள‌ அல்லாஹ்விற்கு எவ்வளவு பெரிய அவமானம் பாருங்கள்! ஒரு கண்பார்வையற்ற ஏழை மனிதன், "அல்லாஹ்வும் அவனது இறைத்தூதரும்" தோல்வி அடைந்த போது, "தன்னைப்போன்ற ஊனமுற்றவர்களுக்காக பேசி" அல்லாஹ்வின் வெளிப்பாட்டை மாற்றினான் என்று வாசிக்கும் போது! இது அல்லாஹ்விற்கு அவமானமாக தெரியவில்லையா முஸ்லிம்களுக்கு?

ஒருவேளை இப்படி இருக்குமோ! முஹம்மது அதிகமாக சிந்திக்காமல் சொந்தமாக "வெளிப்பாடுகளை" இட்டுக்கட்டி கூறுயிருப்பாரோ! மேலும் தான் இட்டுக்கட்டிய வெளிப்பாடுகளில் உள்ள தவறுகளை மக்கள் சுட்டிக்காட்டும் போது, அல்லது சூழ்நிலைகள் மாறுவதை இவரே கண்டுபிடிக்கும் போது, முழு குற்றத்தை அல்லாஹ்வின் மீது போட்டுவிட்டு "இரத்து செய்தல்" என்ற ஒன்றைச் சொல்லி, முந்தைய வெளிப்பாடுகளை மாற்றியிருக்கிறாரோ?

முஹம்மது இப்படி செய்திருக்கமாட்டார் என்று நீங்கள் கருதுகிறீர்களா? ஆனால், ஸூரா 4:95ல் நடந்த நிகழ்ச்சிப் பற்றி பார்க்கும் போது, இப்படித் தான் நடந்துள்ளது என்று தெரிகின்றதல்லவா?

சரி, கண்பார்வையற்றவரின் நிகழ்ச்சி ஒரு புறம் இருக்கட்டும், இன்னொரு சுவாரசியமான‌ நிகழ்ச்சியையும் பாருங்கள்.

குர்‍ஆன் வசனங்கள் முஹம்மதுவிற்கு வெளிப்படும் போது அதனை நேர்மையாக‌ எழுதக்கூடியவராக  "அப்துல்லா இப்னு அபி ஸ‌ர்" என்ற முஸ்லிம் இருந்தார். 

ஆனால், ஒரு நாள் திடீரென்று ஒரு நிகழ்ச்சி நடந்தது . . .

ஒரு நாள், முஹம்மதுவிற்கு குர்‍ஆன் வசனங்கள் வெளிப்பட்டன, அவைகளை முஹம்மது ஓதஓத அப்துல்லா இப்னு அபி ஸர் எழுதிக்கொண்டு இருந்தார். ஆனால், திடீரென்று அப்துல்லாஹ் தான் எழுதிக்கொண்டு இருந்ததை நிறுத்திவிட்டு, அந்த  வசனம் தொடர்பாக ஒரு ஆலோசனையை முஹம்மதுவிற்கு கொடுத்தார், அவ்வசனத்தை மாற்றி எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்குமே என்று அவர் ஆலோசனை கொடுத்தார். அல்லாஹ்வின் வெளிப்பாட்டில், இறை வசனங்களில் தலையிட்டு, மாற்றம் செய்யும் ஆலோசனையை கொடுக்காதே, இது அல்லாஹ்விற்கு மிகப்பெரிய அவமரியாதை என்று அப்துல்லாஹ்வை "கடிந்துக்கொள்வதை" விட்டுவிட்டு, இறைத்தூதர் முஹம்மது அவர் கொடுத்த ஆலோசனையை மாற்றத்தை ஏற்றுக்கொண்டு "நீ விரும்பியபடி, குர்‍ஆன் வசனங்களை மாற்றி எழுதிக்கொள்" என்று அனுமதி கொடுத்துள்ளார்.

குர்‍ஆன் வெளிப்பாடுகளை மாற்றி எழுத முஹம்மது கொடுத்த அங்கீகாரம், எழுத்தாளர் அப்துல்லா இப்னு அபி ஸரை மிகவும் தொந்திரவு செய்துள்ளது. என்னடா இது அப்துல்லாஹ்விற்கு வந்த சோதனை! முஹம்மதுவுக்கு அல்லாஹ் குறிப்பிட்ட வார்த்தைகள்  கொண்ட வசனங்களை வழங்கியிருந்தால், முஹம்மது அவைகளை, இப்னு அபி ஸரின் விருப்பப்படி எழுத எப்படி அனுமதி கொடுக்கமுடியும்! என்ற கேள்விகள் அவருக்கு எழுந்தன. இதுவரை நேர்மையாகவும், உண்மையாகவும் எழுதிக்கொண்டு இருந்த இந்த எழுத்தாளர் ஏமாற்றமடைந்தார்.

இதனால், குர்‍ஆன் வசன எழுத்தாளர் அப்துல்லாஹ், முஹம்மது ஒரு நபியல்ல, அவர் ஒரு பொய்யர், போலியான நபி என்று வெளியே சொல்லத் தொடங்கி, முஹம்மதுவை விட்டு, இஸ்லாத்தை விட்டுவெளியேறி, மக்காவிற்கு உயிர் தப்ப ஓடிவிட்டார். இது முஹம்மதுவிற்கு மிகவும் தர்மசங்கடமாக ஆகிவிட்டது (நம் நாடுகளில் பெரிய புள்ளிகளின், சாமியார்களின் இரகசியங்கள் வெளியே வந்தால் எப்படி இருக்கும் அப்படியாகிவிட்டது). 

உடனே, இன்னொரு வசனத்தை குர்‍ஆன் 6:93ஐ அல்லாஹ்/முஹம்மது வெளிப்படுத்தினா(ன்)ர். இந்த வசனத்தில், இந்த எழுத்தாளரை திட்டித் தீர்த்து, அவன் பொய்யன் என்று குற்றம் சாட்டி, அவனுக்கு நித்திய தண்டனையை அல்லாஹ் கொடுப்பான் என்றுச் சொல்லி, முஹம்மது அவ்வசனத்தை இறக்கினார்[1][2].

குர்‍ஆன் 6:93ஐ இப்போது படியுங்கள்.

குர்‍ஆன் 6:93. அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, “எனக்கு வஹீ வந்தது” என்று கூறுபவன்; அல்லது “அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்” என்று கூறுபவன், ஆகிய இவர்களை விடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) “உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்” (என்று கூறுவதை நீர் காண்பீர்). முஹம்மது ஜான் தமிழாக்கம்

இப்போது வாசகர்களாகிய உங்களுக்கு ஒரு கேள்வி. 

ஒரு பேச்சுக்காக "நீங்கள் தான் முஹம்மது என்று வைத்துக்கொள்ளுங்கள்", உங்களின் இரகசியங்களை எழுத்தாளர் அப்துல்லாஹ் வெளியே சொல்லி உங்களை அவமானப்படுத்திவிட்டார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு, நீங்கள் பெரிய சர்வாதிகாரியாக‌ வலிமையுள்ளவராக மாறிவிட்ட பிறகு, உங்கள் கையில் 'அந்த நபர் அப்துல்லாஹ்' கிடைத்தால் என்ன செய்வீர்கள்?

ஆமாம்.. நீங்கள் என்ன மனதில் நினைத்தீர்களோ, அதையே முஹம்மதுவும் அவனுக்குச் செய்தார், அதாவது, முஹம்மது மிகவும் பெரிய சர்வாதிகாரியாக மாறினார், மதினா முழுவதும் அவரது கைக்குள் வந்தது, மற்ற பகுதிகளும் அப்படியே அவரது கட்டுப்பாட்டுக்குள் வந்தது, இராணுவம் பலத்தது. முஹம்மது மக்காவை கைப்பற்றினார்!

சொல்லுங்கள் பார்க்கலாம், யாரையெல்லாம் முஹம்மது மக்காவில் கொல்லவேண்டும் என்று விரும்பினாரோ, அவர்களின் பட்டியலில் இந்த அப்துல்லாஹ்வின் பெயர் இடம் பெற்று இருக்குமா? இல்லையா? ஆமாம், நீங்கள் நினைப்பது உண்மை தான். முஹம்மதுவின் பட்டியலில் அப்துல்லாஹ் இப்னு அபி ஸர் என்ற குர்‍ஆன் எழுத்தாளனுக்கும் இடம் கொடுக்கப்பட்டது (மக்காவில் முஹம்மது கொல்ல விரும்பிய 10 பேர்கள் பற்றிய முழு விவரங்களை அறிய இந்த தமிழ் கட்டுரையை படிக்கவும்: முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும் - Muhammad And The Ten Meccans).

அப்துல்லாஹ் பற்றிய இந்த நிகழ்ச்சி "அல்ஃப்ஃபியத் அஸ்ஸீரத் இன்னபவிய்யாஹ்" என்ற வாழ்க்கை சரித்திர புத்தகத்தில் அதன் ஆசிரியர் "அல் ஹஃபித் அல் இராகி" குறிப்பிடுகிறார்.

"முஹம்மதுவின் எழுத்தாளர்கள் 42 பேர் ஆவார்கள். இவர்களில் "அப்துல்லாஹ் இப்னு ஸர் அல் அமிரி" என்பவரும் ஒருவர் ஆவார். குர்‍ஆன் வசனங்களை எழுதுபவர்களில் இவர் தான் முதலாவது குறைஷி ஆவார், இவர் மக்காவிலிருந்தே வசனங்களை எழுதிக்கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியினால், முஹம்மதுவின் இறைத்தூது மீது சந்தேகம் கொண்டு, இஸ்லாமை விட்டு மக்காவிற்கு ஓடிச்சென்றார்.

அவர் இப்படி கூறுவார்: “நான் விரும்புகிறதை முஹம்மதுவைக் கொண்டு செய்தேன். அதாவது அவர் என்னிடம் குர்‍ஆன் வசனங்களை ஓதிக்காட்டி, அதில் 'மிக உயர்ந்தவன், ஞானமுள்ளவன்' என்று எழுது என்று எனக்கு கட்டளையிடும்போது, நான் 'ஞானமுள்ளவன்' என்று மட்டுமே எழுதுவேன். அப்போது அவர், 'ஆம், இரண்டும் ஒன்று தான்' என்று சொல்வார்.

இதே விவரத்தை இந்த புத்தகத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது: :  Usûd Ulghâbah fî Ma’rifat Is-Sahâbah, [Dâr al-Fikr, Beirut (Lebanon), 1995], Volume 3, p. 154.

இன்னொரு மேற்கோள்:

On a certain occasion he (Muhammad) said, ‘Write such and such’, but I wrote ‘Write’ only, and he said, ‘Write whatever you like.’”

ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் அவர் (முஹம்மது), 'இப்படி இப்படி எழுதுங்கள்' என்று கூறுவார், ஆனால் நான் 'சிலவற்றை மட்டுமே' எழுதுவேன், உடனே முஹம்மது, 'உங்களுக்கு விருப்பமானதை எழுதுங்கள்' என்று கூறுவார்.

குர்‍ஆன் 23:12ஆம் வசனம், "நிச்சயமாக நாம் மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம். . ." என்று இறக்கப்பட்டது.  இந்த வசனத்தை முஹம்மது அப்துல்லாஹ்விற்கு ஓதிக்காண்பித்தார், அப்போது "பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக செய்தோம்" என்ற இடத்தை அடைந்தபோது, அப்துல்லாஹ் இதோடு கூட "அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - படைப்பாளர்களில் எல்லாம் மிக அழகான படைப்பாளன்" என்று எழுதினால் நன்றாக இருக்கும் என்று ஆலோசனை கூறினார். அப்பொது இறைத்தூதர் "இதையும் எழுதிக்கொள், இப்படித்தான் எனக்கு இவ்வசனம் இறக்கப்பட்டது" என்று கூறினார். அப்துல்லாஹ்விற்கு இப்போது தான் சந்தேகம் வந்தது, அவர் இப்படியாக மற்றவர்களிடம் கூறினார்: "முஹம்மது ஒரு உண்மையான நபியாக இருந்தால், அவருக்கு வெளிப்பாடு வருவது போன்றே எனக்கும் வருகிறது. முஹம்மது ஒரு பொய்யராக இருந்தால், நான் என்ன வெளிப்படுத்தினேனோ, அது அவரது வசனத்திற்கு நிகரான ஒரு வெளிப்பாடாக இருக்கிறது". (Anwar al-Tanzil wa Asrar al-Ta‘wil by ‘Abdallah Ibn ‘Umar al-Baidawi)

மேற்கண்ட நிகழ்ச்சிக்குப் பிறகு முஹம்மதுவின் எழுத்தாளர் அப்துல்லாஹ் மக்காவிற்கு தப்பித்துச் சென்று மேற்கண்டவிதமாக  கூறிக்கொண்டு இருந்தார். 

முஹம்மது மக்காவைக் கைப்பற்றிய நாளில், தனது முன்னாள் எழுத்தாளரைக் கொல்லும்படி கட்டளையிட்டார். ஆனால் எழுத்தாளர் உஸ்மான் இப்னு அஃபானிடம் தப்பிச் சென்று தஞ்சம் புகுந்தார், ஏனென்றால் உஸ்மான் அப்துல்லாஹ்வின் வளர்ப்பு சகோதரர் ஆவார் (அப்துல்லாஹ்வின் தாயார் உஸ்மானுக்கு பாலூட்டியுள்ளார்). எனவே, உஸ்மான் அவரை முஹம்மதுவிடமிருந்து காப்பாற்றி பாதுகாத்து வைத்திருந்தார். சில நாட்கள் கழித்து, மக்கள் அமைதியடைந்த பிறகு, கோபம் தனிந்த பிறகு, உஸ்மான் எழுத்தாளர் அப்துல்லாஹ்வை முஹம்மதுவிடம் அழைத்து வந்து அவருக்கு பாதுகாப்பு கொடுக்கும் படி வேண்டினார் (உஸ்மான் முஹம்மதுவின் மருமகன் ஆவார்). என்ன செய்வதென்று புரியாமல், முஹம்மது நீண்ட நேரம் அமைதியாக இருந்தார், அதன் பிறகு முஹம்மது "அப்துல்லாஹ் இப்னு அபி ஸரின் உயிருக்கு பாதுகாப்பு தருவதாக ஒப்புக்கொண்டார்". உஸ்மானும், முன்னாள் எழுத்தாளர் அப்துல்லாஹ்வும் அவையிலிருந்து வெளியேறியதும், முஹம்மது தனது தோழர்களிடம் "நீங்கள் அவனை கொல்ல வேண்டும் என்பதற்காகத் தான் நான் அமைதியாக இருந்தேன், ஆனால், என் அமைதியின் இரகசியத்தை நீங்கள் புரிந்துக்கொள்ளவில்லை" என்று கூறினார்.

என்ன ஒரு கோழைத்தனமான செயல்! முஹம்மது செய்தது. இப்படி ஒரு விஷமித்தனமான செயலை ஒரு இறைத்தூதர் செய்யலாமா?

முஹம்மது தம்மை சார்ந்தவர்களை முட்டாள்களாக்க, இப்படிப்பட்ட கதைகளையும், குர்‍ஆனின் வெளிப்பாடுகளையும் இட்டுக்கட்டினாரா?

இதனை சரி பார்க்க இன்னொரு சிறிய நிகழ்ச்சியை ஹதீஸ்களிலிருந்து காண்போம். 

ஒரு ஸஹீஹ் ஹதீஸில் முஹம்மது, "அல்லாஹ் தும்மலை விரும்புகிறான் ஆனால் கொட்டாவி வெறுக்கிறான்" என்று கூறுயுள்ளார்.

ஸஹிஹ் புகாரி 6223 & 6226. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் தும்மலை விரும்புகிறான்; கொட்டாவியை வெறுக்கிறான். ஆகவே, ஒருவர் தும்மியவுடன் ‘அல்ஹம்து லில் லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ் வுக்கே) என்று சொன்னால், அதைக் கேட்கும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அவருக்கு (‘யர்ஹமுக்கல்லாஹ்-அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்’ என்று) மறுமொழி கூறுவது அவசியமாகும்.

ஆனால், கொட்டாவி ஷைத்தானிட மிருந்து வருவதாகும். உங்களில் யாராவது கொட்டாவி விட்டால் முடிந்த வரை அதைக் கட்டுப்படுத்தட்டும். ஏனெனில், யாரேனும் (கட்டுப்படுத்தாமல்) ‘ஹா’ என்று (கொட்டாவியால்) சப்தமிட்டால் ஷைத்தான் சிரிக்கிறான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

முழு பிரபஞ்சத்தின் எல்லையற்ற படைப்பாளியாகிய அல்லாஹ், அவரே உருவாக்கியதாகக் கூறப்படும் மனித உடலின் இயற்கையான எதிர்வினைகளாகிய தும்மலை ஏன் விரும்புகிறார் அல்லது கொட்டாவியை ஏன் வெறுக்கிறார்?

  1. மனிதனுக்கு வரும் தும்மல் எப்படி எல்லையற்ற படைப்பாளியை அல்லாஹ்விற்கு மகிழ்ச்சியைத் தருகிறது? இதன் பின்னால் இருக்கும் உண்மையென்ன?
  2. இதே போன்று "கொட்டாவி" ஏன் அல்லாஹ்விற்கு தொந்தரவு செய்கிறது?
  3. இப்படிப்பட்ட முட்டாள் தனமான விவரங்கள் எப்படி உண்மையாக இருக்கும்?

இதிலிருந்து அறிவது என்னவென்றால், முஹம்மது தனது ப‌யங்களை அல்லாஹ் மீது சுமத்தி, தனது பொய்யான‌ மூடநம்பிக்கைகளை நியாயப்படுத்த அல்லாஹ்வை தனது நிலைக்கு இழுத்துச் சென்றுள்ளார். இதற்காக பல கட்டுக்கதைகளை அவிழ்த்திவிட்டுள்ளார்.

சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வால் "மனிதர்கள் கொட்டாவிவிடுவது தடைசெய்யப்பட்டிருந்தால்", ஏன் முந்தைய எந்த ஒரு தீர்க்கதரிசியும் அதைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை, எச்சரிக்கவில்லை? அல்லாஹ் அதை வெறுத்தார் என்று தெரியாமல் மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கொட்டாவி விட்டுக்கொண்டே இருக்கிறார்களே! இது என்ன கொடுமை?

முடிவுரையாக, இதுவரை பார்த்த விவரங்களிலிருந்து, தனக்கு அல்லாஹ் இறக்கிய‌ குர்‍ஆன் வசனங்களில், எழுத்தாளர்கள் சொந்தமாக வார்த்தைகளை சேர்க்க அனுமதித்த முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசியாகத் தான் இருக்கவேண்டும் என்று சான்றுகளுடன் புரிகிறது. மேலும், மக்களை முட்டாள்களாக்க அல்லாஹ்வை தஞ்சாவூர் தலையாட்டும் பொம்மையாக முஹம்மது பயன்படுத்தியுள்ளதும் புரிகிறது. எனவே இப்படிப்பட்ட மார்க்கத்திடம், இஸ்லாத்திடம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

தேதி: 10th Sept 2021

மூலம்: https://www.faithbrowser.com/beware-of-fraud/

அடிக்குறிப்புக்கள்:

[1] அப்பாஸ் விரிவுரை: - Abbas - Tanwîr al-Miqbâs min Tafsîr Ibn ‘Abbâs

(Who is guilty) who is more tyrannical and more daring (of more wrong than he who forgeth a lie against Allah, or saith) Allah did not reveal anything, this is Malik Ibn al-Sayf, or him who says: (I am inspired) with a Scripture, (when he is not inspired in aught) with any Scripture, this is Musaylimah, the liar; (and who saith: I will reveal the like of that which Allah hath revealed) I will say the like of what Muhammad (pbuh) is saying: this is 'Abdullah Ibn Sa'd Ibn Abi Sarh. (If thou couldst see) O Muhammad, (when the wrong-doers) the idolaters and the hypocrites, on the Day of Badr (reach the pangs of death and the angels stretch their hands out) to take out their souls, (saying: Deliver up your souls) your spirits. (This day) the Day of Badr, as it is said it is the Day of Judgement (ye are awarded doom of degradation) a severe doom (for that ye spake concerning Allah other than the Truth, and scorned) you thought yourselves too great to believe in Muhammad (pbuh) and the Qur'an, (His portents) Muhammad (pbuh) and the Qur'an. 

Source: https://quranx.com/Tafsirs/6.93

[2] வஹிதி விரிவுரை: - Wahidi - Asbab Al-Nuzul by Al-Wahidi

(Who is guilty of more wrong than he who forgeth a lie against Allah, or saith: I am inspired…) [6:93]. This was revealed about the liar, Musaylimah al-Hanafi. This man was a soothsayer who composed rhymed speech and claimed prophethood. He claimed that he was inspired by Allah. (… and who saith: I will reveal the like of that which Allah hath revealed?) [6:93]. This verse was revealed about 'Abd Allah ibn Sa'd ibn Abi Sarh. This man had declared his faith in Islam and so the Messenger of Allah, Allah bless him and give him peace, called him one day to write something for him. When the verses regarding the believers were revealed (Verily, We created man from a product of wet earth…) [23:12-14], the Prophet dictated them to him. When he reached up to (and then produced it as another creation), 'Abd Allah expressed his amazement at the precision of man's creation by saying (So blessed be Allah, the Best of Creators!). The Messenger of Allah, Allah bless him and give him peace, said: “This ['Abd Allah's last expression] is how it was revealed to me”. At that point, doubt crept into 'Abd Allah. He said: “If Muhammad is truthful, then I was inspired just as he was; and if he is lying, I have uttered exactly what he did utter”. Hence Allah's words (and who saith: I will reveal the like of that which Allah hath revealed). The man renounced Islam. This is also the opinion of Ibn 'Abbas according to the report of al-Kalbi. 'Abd al-Rahman ibn 'Abdan informed us> Muhammad ibn 'Abd Allah ibn Nu'aym> Muhammad ibn Ya'qub al-Umawi> Ahmad ibn 'Abd al-Jabbar> Yunus ibn Bukayr> Muhammad ibn Ishaq> Shurahbil ibn Sa'd who said: “This verse was revealed about 'Abd Allah ibn Sa'd ibn Abi Sarh. The latter said: 'I will reveal the like of that which Allah has revealed', and renounced Islam. When the Messenger of Allah, Allah bless him and give him peace, entered Mecca, this man fled to 'Uthman [ibn 'Affan] who was his milk brother. 'Uthman hid him until the people of Mecca felt safe. He then took him to the Messenger of Allah, Allah bless him and give him peace, and secured an amnesty for him”.


ஃபெயித் ப்ரவுசர் (Faith Browser) கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்